குவெய்த் அவென்யூவிலிருந்து உம்மல்ஹாசம் பகுதி நுழைந்தவுடன் இரண்டாவது குறுக்கு ரோட்டில் திரும்பினால் இவர் வசிக்கும் பில்டிங். மிகப்பெரிய ஹாலின் ஒரு பக்கம் விளக்கேற்றி வைத்து பாபா படம். வாப்பா ஶ்ரீதர்! என வரவேற்பார்.
‘ஶ்ரீதர்! அது செஸ்ட் பெயின் கெடையாது.. அசிடிட்டி தான். படுக்கறதுக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடி சாப்ட்டுடு..2 தலகாணி வச்சு சரிவா படு.. ரிஃப்ளெக்ஸ் வராது..
‘எதுக்கும் தைராய்டு செக் பண்ணிடு இவளே! காய்ட்டர் இருக்கான்னும் பாத்துடலாம். கழுத்து லேசா வீங்கியிருக்கே! எல்ட்ராக்ஸின் எவ்ளோ எடுத்துக்கறே?’
‘நீ பாபாவை வேண்டிக்கோ.. எல்லாம் சரியாயிடும்’
நேரில் பார்க்கும்போதோ போனிலோ மேற்சொன்ன அட்வைஸ் கொடுக்கும் இவரிடம் பேசினாலே பயம் போய் வலியும் பறந்து போகும்.
‘ப்ளட் டெஸ்ட் மத்த டெஸ்ட் எல்லாம் செஞ்சிடலாம்.. நீ நாளைக்கி ஆஸ்பிடல் வந்துடேன்’ என இவர் சொன்னதும் மறுநாள் 20 கிமீ தொலைவில் ஹமாத் டவுன் அல்லது மால்கியா ஹெல்த் சென்டருக்கு நானும் Mohan Gopal Krishnan னும் காரில் விரைவோம். கூட்டம் அம்மும். உள்ளூர்க்கார பஹ்ரைனிகள். மோகன் பெயரை கூப்பிட்டவுடன் நாங்கள் உள்ளே நுழைந்தால் பேஷன்ட்டிடம் சரளமான அரபியில் பேசிக்கொண்டிருப்பார். சட்டென ஈசிஜி, கார்டியக் என்சைம் என டெஸ்ட்கள் செய்து, எல்லாமே நார்மலா இருக்குப்பா என இவர் சொல்லி பான்ட்டாப்ரசால் மாத்திரையோடு வெளியே வரும்போது ‘அப்பாடா’ என இருக்கும். அந்த அளவிற்கு இவரிடம்
பாசிடிவ் எனர்ஜி..அங்கேயே காண்டினில் சாய் குடித்துவிட்டு நிம்மதியாக கிளம்புவோம்.
அவ்வப்போது எங்கள் கெட்டுகெதரில் ‘வா வாத்யாரே ஊட்டான்டே’ பாடலை கணீர் குரலில் பாடுவார். ‘திருமால் பெருமைக்கு நிகரேது’ பாடல் வரிக்கு வரி மனப்பாடம். கல்யாண வீட்டில் மெஹந்தி, சங்கீத் என காக்ரா உடையில் முன்னாடி நிற்பார்.
மாதந்தோறும் எங்கள் வீட்டில் நடக்கும் கிரியா பாபா சத்சங்கத்தில் இவர் கலந்துகொண்டாலே சத்சங் களை கட்டும்.
இவர் விமரிசையாக நடத்தும் பூஜைகளுக்கு தயக்கமேதுமின்றி பிரசாதம் ஸ்பான்சர் செய்வது சங்கீதா ரெஸ்டுரன்ட் பாபு.
30 வருடங்களுக்கு மேல் பஹ்ரைனில் வசிக்கிறார். தீவிர மஹா அவதார் பாபா பக்தை. 94இல் நான் பஹ்ரைன் வந்தறங்கியதும் இவரிடம் என்னை அறிமுகப்படுத்தியது.. வேற யாரு! நம்ம Ganapathi Subramanian தான்.
எனக்கும் கணபதிக்கும் உடன் பிறவா சகோதரி... Mala Muralitharan!
No comments:
Post a Comment