1. நாடகம் டான் என மாலை 7.30க்கு குறித்த நேரத்தில் ஆரம்பித்தார்கள். ஒரு நிமிடம் முன்னே பின்னே கூட இல்லை.
2. ஒவ்வொருகாட்சியும் முடிந்து அடுத்த காட்சி துவங்கும் முன், அந்த கேப்பில் நாம் வாட்ஸ்அப் மெசேஜ் பார்ப்பதற்குள், அதிகபட்சம் அறுபதே விநாடிகளுக்குள் (சில காட்சிகள் முப்பதே விநாடிக்குள்) சட்டென மேடை பிரகாசமாகி அடுத்த காட்சி ஆரம்பம்! நாங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டோம் ( we were taken aback என சொல்ல வந்தேன்!
)

4. மொபைல் போனை ஆஃப் அல்லது ‘அமைதி அடைவு’ நிலைக்கு மாற்றுங்க என அறிவிப்பாளர் சொன்னதை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டாலும், நடுவே ஏதோ கால் வருவது போல இருந்ததால் கைப்பேசியை எடுத்து நான் பார்க்க, அதிலிருந்து பளீரென ஒளி வெள்ளம் பாய்ச்ச, மேலே இருந்து லேசர் லைட்டை துல்லியமாக என் கைப்பேசி மேல் யாரோ அடித்தார்கள், ‘தம்பி! நிறுத்திக்க!’ என எச்சரிப்பது போல. சபாஷ்! பாயும் ஒளியாச்சே!
5. ஒருவர் கூட நடுவே எழுந்து போவதோ, ‘அ.. அ.. ஆக்ச்சு’ என பெருஞ்சப்தமெழுப்பி தும்மவில்லை.
6. அலாரம் வைத்தது போல சரியாக 9 மணிக்கு நாடகம் முடிந்தது. என்னா டைமிங்பா!
7. ‘வசனம் சரியா காதில் விழலை’.. ‘பாதி வசனம் முழுங்கிட்டார்’ போன்றவைகள் அறவே இல்லை. எல்லா நடிகர்களும் வசனங்களை ஸ்பஷ்டமாக சொல்கிறார்கள்.
8. ஏராளமான நகைச்சுவை வசனங்கள் நடுநடுவே வரும்போது பார்வையாளர்கள் பக்கமிருந்து எழும் பலத்த சிரிப்பு மற்றும் கைத்தட்டல்களின் போது, அந்த பந்து நொடிகளை நடிகர்கள் சாதுரியமாக கொஞ்சம் இடைவெளி கொடுத்து, அந்த pauseஐ அப்பட்டமாக தெரிவிக்காமல் உடல்மொழியிலேயே காட்சியை கையாண்டு அடுத்த வசனத்திற்கு சென்ற விதம் அருமை. பஹ்ரைனில் நாங்கள் இதுபோன்ற நாடகங்களை பார்க்கும்போது, பெரிய ஜாம்பவான் நாடக நடிகர்கள் கூட அது போன்ற pauseகளை சரியாக கையாள முடியாமல் ஙே என முழிப்பதும், கைத்தட்டல் முடியும் வரை பார்வையாளர்களை வெறித்து பார்ப்பதுமென சொதப்புவார்கள். இவர்கள் வேற மாதிரி! Hats off!
9. நாடகம் ஆரம்பி்த்து முடியும் வரை அந்த 90 நிமிடங்கள் பார்வையாளர்களை கட்டிப்போட்டது போல தொய்வோ, அலுப்போ இல்லாத காட்சிகள். இதை விட வெற்றிக்கு வேறென்ன வேண்டும்!
10. அப்பாவும் மகளும் தங்கள் வீட்டில் (மேடையின் ஒரு பக்கம்) பேசிக்கொள்ள, மற்றொரு வீட்டில் (மேடையின் அத்தப்பக்கம்) அம்மாவும் மகனும் பேசிக்கொள்ளும் காட்சியில், இந்த வீட்டு அப்பாவின் கேள்விக்கு, அந்தப் பக்கம் பையன் அம்மாவிடம் பதில் சொல்வது போலவும், அந்தப்பக்கம் அம்மா பையனிடம் ஏதோ கேட்க, இந்தப்பக்கம் பெண் அப்பாவிடம் பதில் சொல்வது! பிண்றீங்க ஶ்ரீவத்son!
11. பிரதான பாத்திரங்கள் அநேகமாக எல்லா காட்சியிலும் வருகிறார்கள். அதிலும் 90 நிமிடங்கள் முழுக்க வண்டி வண்டியாக வசனங்களை எப்படி டான் டானென வெகு இயல்பாக பேசுகிறார்கள்! நடுவே வசனங்களை மறப்பதோ, தடுமாறுவதோ என எதுவுமில்லை. இருவர் பேசிக்கொள்ளும் போது அவர்களின் வசனங்கள் ஒன்றுடனொன்று ஓவர்லேப்பிங் ஆகாமல் என்னவொரு ஸ்மூத் ஃப்ளோ! பாராட்டுக்கள்!
12. லாவன்யா மற்றும் பாஸ்கர் இருவரும் பிரதான பாத்திரங்கள். இந்த இருவரும் சரி, பாட்டி பாத்திரமேற்றவர், மற்ற நடிகர்களும் சரி, எல்லோருமே அந்தந்த பாத்திரங்களில் வாழ்ந்து விடுகிறார்கள்.
13. சில இடங்களில் சாட்டையடி போலவும், பொளேர் என அறை விடுவது போலவும் நறுக்கு தெரித்தார் போல பாயின்ட் ப்ளாங்க் வசனங்கள் மனதில் இடம் பெற்றன. அபாரம்! குறிப்பாக அந்த ‘சாவி’.. வேணாம்! நேரில் பார்த்து இன்புறுக!
14. இருபது வயதிலிருந்து 70,80க்கு மேல் வயதொத்தவர்கள் பார்த்து மகிழும் கதை. நம் வீட்டில் நிகழும் அன்றாட சமாச்சாரங்கள் அப்படியே நாடகத்தில் பிரதிபலிக்கின்றன. நடுவே சில இடங்களில் என் மனைவி Usharani Sridhar ‘ஐய்யோ! நேனு இன்ட்டிலோ செப்ப டயலாகு இதி!’ என துள்ளிக்குதித்தார்.
15. பார்வையாளர்கள் அநேகம் பேரின் குழந்தைகள் 90ஸ் கிட்ஸ் போலும். காட்சிகள் நம் இல்லத்துடன் வெகுவாக கனெக்ட் ஆகின்றன.
16. நாடகத்தை கடந்த 3ஆம் திகதி பெங்களூர் ஜே.பி. நகரின் மையத்தில் ‘ரங்கஷங்கரா’ அரங்கில் மனைவி, மைத்துனி, ஷட்டகர் சகிதம் பார்த்து மகிழ்ந்தேன். அரங்கம் காட்சியகம் மாதிரி வடிவானது (Gallery type). ஒலியியல் விளைவுகள் (Acoustics) அற்புதமாக இருந்தன. கார் நிறுத்தம் இல்லையெனினும் அருகே சாலையோரத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்த வசதியாக இருந்தது.
17. வசனங்களின் ஊடே மயிலிறகால் வருடுவது போல ‘தம்.. தம்.. தர.. தம்.. தம்..’ என இசையமைப்பாளர் தக்ஷினின் பின்னணி இசை அருமை.
18. இவ்வளவு அருமையான நாடகத்தை பார்த்த பிறகு, மறுநாள் நண்பர்களுடன் சிலாகித்தபோது அவர்கள் கேட்டது ‘என்னது ரெண்டு காட்சி, அதுவும் ஒரே நாள் தானா?’ இன்னும் சில நாட்கள் நீட்டித்திருக்கலாமே!
19. நாடகம் முடிந்து எல்லா கலைஞர்களும் அரங்கிற்கு வெளியே நின்றுகொண்டு பார்வையாளர்களின் கைகுலுக்கல்கள் மற்றும் பாராட்டுக்களை முகம் மலர ஏற்றுக்கொள்ள, அந்த வடகிழக்கு செக்யூரிட்டி எங்களை சீக்கிரம் இன்னொரு வழியாக வெளியே போகச்சொல்லியும், பிடிவாதமாக காத்திருந்து கலைஞர்களை பாராட்டிய பின்னரே வெளியே வந்தோம்.
20. கதை வித்தியாசமானது. கத்தி மேல் அவர்கள் நடக்கவில்லை.. லேசாக குதித்திருக்கிறார்கள். நடைமுறைக்கு தகுந்தார்ப்போல கதையின் முடிவும் வெகு யதார்த்தமானது.
21. இந்த நாடகத்தால் இவர்கள் ஈட்டும் வருமானம் தொண்டு நோக்கத்துடனானது எனபதை அறிக!
22. யாரோ கேட்டார்கள் நாடக தலைப்பு பாயும் ஒலியா அல்லது ஒளியா என. என் பதில்: இரண்டும் இல்லை.. பாயும் புலி! 

நண்பர் Anand Raghav மூலம் இந்நாடகம் பற்றி தெரிந்துகொண்டு, குடும்பத்துடன் நாடகம் பார்த்து மகிழ்ந்தோம்.
thRee (Threeentertains) அவர்கள் வழங்கிய, ஶ்ரீவத்சன் அவர்கள் எழுதி இயக்கிய இந்த நாடகம் பல சினிமா பிரபலங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment