Friday, June 20, 2025

இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு…


துபாய் வந்தவுடன் இவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப, உடனே இவரிடமிருந்து குரல் செய்தி, ‘சாயங்காலம் வீட்டுக்கு வாங்களேன் ஶ்ரீதர்!’ என.
திருச்சி கீரணூர் முகாம்பிகா பொறியியல் கல்லூரியில் இயக்குநர் கௌதம் மேனனுக்கு ஒரு வருடம் மூத்தவர்.
பஹ்ரைனில் மேடை இசை நிகழ்ச்சிகள், தனது இல்லத்தில் மாதந்தோறும் கரோக்கி பாடல் நிகழ்ச்சி நடத்திய பிரபல மனிதர் இவர். சவுதி மற்றும் பஹ்ரைனில் பல வருடங்கள் பணியாற்றிய பின் கடந்த 10 வருடங்களாக துபாயில் இருக்கின்றனர் கணேஷ்-சுப்ரஜா தம்பதி. துபாயில் ஏராளமான இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், மற்றும் பல பிரபல கலைஞர்களை வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி நம்மை மகிழ்விக்கிறார்.
‘எந்த பாடகரின் குரலையும் இமிடேட் செய்யாமல் உங்கள் சொந்த குரலில் பாடுங்கள். அப்புறம் பாருங்கள் உங்களது ரசிகர்களின் பாராட்டுக்களை’ என SPB அவர்கள் சொன்னதற்கேற்ப அபாரமான குரல் வளம் கொண்டவர். ராக ஆலாபனைகள், கமகம், சங்கதிகள் என எல்லா நுணுக்கங்களையும் பிரித்து மேய்ந்து பாடுபவர். இவரது மகள் சமிக்‌ஷாவும் அற்புதமாக படவல்லவர். ஆங்கில சிம்ஃபனி மற்றும் பாடகர் குழு (Choir) பாடல்கள் பாடும் கெட்டிக்காரி.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்ற உலகின் தலைசிறந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ரோல்டா குழுமத்தில் வைஸ் பிரெசிடென்ட்டாக பணியாற்றும் கணேஷ் பணியில் சிகரம் தொட்டாலும் கால்கள் தரையில் பதித்து நிற்கும் அடக்கமானவர். மனைவி சுப்ரஜா Supraja Ganesan கல்வி நிறுவனமொன்றில் கற்பிப்பவர்.
பர்துபாய் பகுதியில் நண்பர் கண்ணன் ஜானகி (Kannan Nagarajan) இல்லத்திலிருந்து கூப்பிடு தூரம் தான் இவர் வசிக்கும் தனி வீடு. மைந்துனர் Satish Raj மற்றும் சகோதரி Pramila S Rajஉடன் நேற்று மாலை சென்றோம்.
மேல் தளத்தில் இசைக்கெனவே ஒதுக்கப்பட்ட அறையில் நுழைந்தோம். அது ஒரு ரெகார்ட் ஸ்டுடியோ தான். லாஜிக் ப்ரோ மற்றும் இன்னபிற மென்பொருட்களை கர்ப்பம் தரித்த கணினி, ஒலிப்பெட்டி, இசை விசைப்பலகை, மற்றும் திரையில் அலை அலையாய் கோடுகள் நெளிய மூன்று ஸ்தாயியிலும் ஏற்ற இறக்கங்களுடன் சிரமத்தை வெளிக்காட்டாது மலர்ந்த முகத்துடனே பாடுவது Ganesan Ramamoorthyயின் தனி சிறப்பு.
‘இசையோடு தெய்வம் வந்து விளையாடும்’ இவர்களது வீட்டை விட்டு இரவு 12க்கு மேல் விடைபெற்றுக்கொண்டு் திரும்பினோம்.

No comments:

Post a Comment