Saturday, February 2, 2013

ஏம்ப்பா! நீதான் நல்லா படம் எடுப்பியே! சும்மா ஜாலியா தெனாலி, பஞ்சதந்திரம், மைகேல் மதனகாமராஜன்..ன்னுட்டு எல்லாரையும் காமெடியால சிரிக்க வெச்சுட்டு, நல்ல டூயட் சீன் காமிச்சிகிட்டு, உனக்கு புடிச்ச (மத்த ஹீரோவெல்லாம் தயங்குவாங்க) 'முத்த காட்சி அது இதுன்னு உன் ரசிகர்களுக்கு வேண்டியது நெறையா இருக்கேப்பா!
நீ நல்லவனாச்செப்பா! அத வுட்டுப்புட்டு என்னாத்துக்கு இந்த வம்புதும்புக்கு போறே?
ஜாதி, மதம் பத்தி நீ வாய தொரந்தாவே ஒன்னுகெடக்க ஒன்ன சொல்லி நல்லா வாங்கி கட்டியும் இன்னம் புத்தி வரலையா?
புதுசா ஊரவுட்டு வேற ஓடிப்போவேன்னு பூச்சி காட்டறே!
தம்பி வேணாம்ப்பா! மகாநதி மாதிரி மெசேஜ் சொல்லு போதும்... வயசு வேற ஏறிகிட்டே போகுது... முணுக்குன்னு கோபம் வேற வந்துருது..
உன்ன எல்லாரும் திட்டுனா மனசுக்கு கஷ்டமாக்கீதுபா..
அவனப்பாரு (ரஜினி).... அவனும் உன்னமாதிரி தான் ரசிகர்களுக்கு தேவையானமாதிரி படம் எடுத்து,சின்னபொண்னுங்களோட டான்ஸ் ஆடறான்..நல்ல மெசேஜ் சொல்லி காசும் பண்றான்.சும்மா அரசியல், இமயமல அது இதுன்னு சொல்லி அங்க இங்க போயி,கப்புன்னு கொயட்டாயி, தானுண்டு தன வேலையுண்டுன்னு இருக்கான். 
போரும்பா... எங்கயும் ஓடிப்போகாம உள்ளூர்லேயே இரு..மத்தவங்க மனசுக்கு புண்படற சீன எடுத்துட்டு, சாமி, சிலுவை,ஜாதி பத்தி வாய் தறக்காம ஒடம்ப பாத்துகிட்டு ஆஸ்கர் வாங்கற வேலையப்பாரு.... சும்மா வம்ப வெலைக்கி வாங்கிகிட்டு....திருந்துப்பா..