திருச்சி முசிறி பக்கம் தாத்தையங்கார் பேட்டை தாண்டி துறையூராண்ட ‘நவீன் கார்டன்’னு ஓருத்தர் நடத்தறார். அழகான 20 ஏக்கரா பண்ணை வீடு. நிறைய விலங்குகளை வளர்க்கறார். நாம போனவுடனே அந்த பிராணிகள் ஆசையா ஓடி வந்துச்சு. நாம அதுங்கள கொஞ்சனுமாம். ‘டாங்க்கி!’ன்னு கத்தினா ‘இதோ வந்துட்டேன்’னு கத்திக்கிட்டே ஓடி வந்தது ஒரு கழுத. கழுத! மெய்யாலுமே அது கழுத தான். கடிக்கப்போவுதுன்னு பயந்து ஓடிட்டோம். கடிக்காதாம். ஓரு அம்மா சூப்பரா டீ போட்டு குடுத்தாங்க. நாம தங்கப்போற ரூம்ப காமிச்சாங்க. ஏசி, கீசர்னு வசதியா இருக்கு.
காலேஜ் பையன் ஒருத்தன் வந்து சுத்தி காமிச்சான். நெருப்புக்கோழி ரெண்டு ஃப்ரெண்ட்லியா பக்கத்துல வருது. விதவிதமான ஏழெட்டு வளர்ப்பு நாய்கள். எல்லாத்துக்கும் பேரு வச்சிருக்காங்க. அதுல ஒன்னு ‘எமி ஜாக்ஸன்’னு பேரு. ‘கேம்லீ’ன்னு கத்தினா பெரிய்ய ஒட்டகம் வந்து வலிக்காம நம்ம தோளை செல்லமா கடிக்க வந்தது. வேற வெனையா வேணாம், உட்ருப்பான்னு இந்தப்பக்கம் வந்துட்டோம். நெறைய்ய கோழிங்க. வான் கோழிங்க. புறா எல்லாம் பறந்து வந்து தோள்ள ஒக்காருது.
எப்பிடிப்பா இப்படி வளர்த்து வச்சிருக்கீங்கன்னு ஆச்சரியமா கேட்டோம். பய குஷியாயிட்டான். உள்ளர்ந்து தண்ணீர் பல்லி, சிலந்தி, நாலடி ஓணான் (இக்வானா) எல்லாமே கொண்டு வரான். ஆசையா சிலந்திய கைல அள்றான். விஷ ஜந்து இல்லியாம். அது அப்படி சொல்லிச்சான்னு கேட்டோம்.
பயமே இல்லியாப்பான்னு கேட்டா சிரிக்கிறான். பார்ட் டைம் வேலையாம். பி.ஏ- ஹிஸ்ட்ரி படிக்கிறான். அது கடிச்சிரும்ங்கற பயமே இல்லாமெ எப்படிப்பா அத தொடறே கேட்டது தான், உடனே ஓடிப்போய் உள்ளார்ந்து பாம்பு ஒண்ணை கொணாந்தான். அத கொஞ்சறான் வேற. அதை குழந்தை மாதிரி தூக்கி வச்சி நாமும் தடவி கொடுக்கலாமாம். சமத்தா இருப்பானாம். கொழந்த என்ன மம்மு சாப்ட்டுச்சுன்னு வெள்ளந்தியா கேட்டேன். எலிங்கறான். ஐயோ! எலி எங்கடாப்பா கெடைக்கும்னு கேட்டா பக்கத்தூர்ல விக்கிறாங்கன்றான். அடுத்த அவன் செஞ்சது பகீர்னுச்சு. சாப்ட்ட எலி இதோ இங்க உள்ள இருக்குன்னு அதோட உப்பியிருந்த ஹன்சிகா மோட்வானி வயித்தை காட்னான். ‘நல்லா இருப்பா!’ன்னு கிளம்பிட்டோம்.
நைட்டுக்கு சப்பாத்தி, தக்காளி தொக்கு, தயிர்சாதம் போறும்னுட்டோம். மத்தியான சாப்பாடே செம்ம ஹெவி. தயிர் சாதத்தை நெய்யில தாளிக்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கேன்னு கேட்டா கிராமத்துல ஒரம்பரை வந்தா அப்பிடித்தானாம்.
இயற்கை அழகு, பெரிய்ய ஒலிம்பிக் சைஸ் நீச்சல் குளம், மூணு வேளையும் கிராமத்து சமையல், எப்பவும் கீச் கீச்னு பறவைகள் சத்தம். ஒரு ராத்திரி தங்கலாம்.
எங்க ஊர் திருச்சி 30 கி.மீ. அடுத்த நாப்பது நிமிசந்தான். திருச்செந்துரை, உத்தமர் கோயில், சமயபுரம், நொச்சியம், திருப்பஞ்சீலின்னு சுத்திலும் பத்து கிலோ மீட்டர்ல நெறய்ய கோயில்கள்.
ரோட்டோரத்தில ஒரு எளநி குடிச்சிட்டு திருப்பஞ்ஞீலி சிவன் கோவில், அங்கியே எமதர்மர் கோயில் எல்லாம் சேவிச்சிட்டு டாண்ணு ஒரு மணிக்கி அக்கா வீட்டுக்கு (சுப்ரமணியபுரம்) மதியம் சாப்பிட வந்தாச்சு.
இனியெலாம் சுகமே!
No comments:
Post a Comment