எல்லா வடாபாவும் வாடா பாவ் அல்ல.. மும்பையில் செய்யப்படுவதே வடா பாவ் ஆகும்!
இங்க என்ன விசேஷம்! பாவுக்கு நடுவிலே லசூன் (பூண்டு) சட்னி தூவுவான். அதென்ன சட்னி! சிவப்பு மிளகாய்தூளில் கொஞ்சம் எள், உலர்ந்த தேங்காய் பொடி, உப்பு… முக்கியமாக தட்டிப்பொடியாக்கிய பூண்டு துண்டங்கள். பங்களா தேஷில் இருந்து மேற்கு வங்காளத்தினுள் ஊடுருவிய சட்ட விரோதிகள் போல பூண்டுத்துண்டங்கள் நாவில் தட்டுப்படாது, ஆனால் உள்ளே இருக்கும். தண்டோடு கொத்த மல்லி போட்ட பட்டாட்டா வடா கடிக்கும்போது க்ரஞ்ச்சியாக இருக்கும்.
கத்தியால் பாவை பாதி வெட்டி, சிந்துபாத் பாம்பின் வாயை திறப்பது போல முழுவதும் திறந்துவிடக்கூடாது. லேசாக பிளந்த பாவுக்குள் வடாவை ஸ்டாண்ட் போட்ட கார் பான்னெட் போல நிறுத்தி வைத்தல் அவசியம். பாவை உள்ளே வைக்கும் முன் மறக்காமல் க்ரீன் சட்னியை இரு உள் பக்கமும் ஊற்றி, சிகப்பு லசூன் சட்னியை தாராளமாக தூவிய பின் வடாவை வைத்து லேசாகத்தான் மூடுவான். அழுத்தி பாவ்வை மூடி பட்டாடா வடாவை பிதுக்குதல் பித்ரு பாவத்திற்கு சமம்.
நிற்க, எதிரே வடாபாவ் வைக்கப்பட்டால் உடனே படாரென அதை எடுத்து, கடித்து, கபளீகரம் செய்து, அசோகன் மஞ்சுளா மீது படர்ந்து கற்பழிப்பது போன்ற அவசரம் தேவையில்லை. சென்ற வாரம் பிறந்த குழந்தையை ஆசையுடன் அள்ளியெடுப்பது போல இரு கைகளால் வடா பாவை செல்லமாக எடுத்து, அதை சுற்றும் முற்றும் ஆசையாக பார்த்து, பக்கத்தில் உள்ளே கொ.மல்லி சட்னியில் லேசாக முக்கி… முக்கின்னா உடனே உரிமைக்குரல் எம்ஜியார் லதாவை வரப்பு மேட்டு தண்ணித்தொட்டிக்குள் முக்கி எடுப்பது போன்ற அவசரத்தனம் எதுக்கு! பச்சை சட்னியில் தொட்டு, அடுத்து சிகப்புத்தூள் சட்னியில் ஒற்றி எடுத்தால் தான் சட்னி ஒட்டும். கவனமாக முன்பற்களால் பாவ் ப்ளஸ் வடா இரண்டையும் சேர்த்து கடித்து மென்று ரசித்து சாப்பிடுதல் சுகம்.
‘எக்ஸ்கியூஸ்மி.. இதுக்கு தொட்டுக்க டொமேட்டோ கெச்சப் இருக்கா’ என கேட்பவர்களை எம கிங்கரர்கள் பத்து நாள் லாக்கப்பில் வைத்து கவனித்து அனுப்ப வேண்டும். கூடவே கடித்துக்கொள்ள வறுத்த பச்சை மிளகாய் மற்றும் கட்டிங் சாய் இருந்தால் சொர்க்கம். நாங்கள் கோக்கும் ஷர்பத் எடுத்துக்கொண்டு கட்டிங் சாய் எடுத்துக்கலையே என வருத்தப்பட்டோம்.
‘பெங்களூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு’ என இண்டிகோ விமான பெண் அழைக்க, மும்பய் விமான நிலைய டெர்மினல்-1 அடானி ஒன் கம்பெனிக்குச்சொந்தமான கடையில் வாங்கி சுவைத்த வடா பாவ் மகாத்மியத்தை பாதியிலேயே முடித்து விட்டு போர்டிங் பாஸுடன் 3.15 விமானத்தை பிடிக்க கேட்டுக்கு ஓடி….
No comments:
Post a Comment