நண்பர் Jayaraman Raghunathan அவரது மகன் திருமண நிகழ்ச்சிக்கு ‘பூட்றா வண்டிய.. கெளம்புடா!’ என அவசரமாக ரெடியாகி வழக்கம் போல கோலார், சித்தூர், ராணிபேட் ரூட்டில் ஆளறவமற்ற சாலையில் 100ஐத்தாண்டாமல் ஓட்டி, 7 மணி நேரத்தில் மாலை மூனறை மணிக்கு தொரப்பாக்கம் வந்து சேர்ந்தோம். நீண்ட ஓய்வுக்குப்பின் நிகழ்ச்சிக்கு கிளம்பலாமென்றால் மாலை 5 மணிக்கு மேல் சரியான மழை, அஷோக் நகர் உதயா கல்யாண மண்டபம் போய்ச்சேற 7.30யாகி, மண்டபத்தை பிரதட்சணமாக இரண்டு சுற்று சுற்றியபின் வாசலில் பார்க்கிங் கிடைத்தது.
சீக்கிரம் கிளம்பிவிட்ட நண்பர் Srinivasan Ka வும் மனைவி Jayasri யும் எதிரே வர கை கொடுத்துவிட்டு உள்ளே நுழையும்போது ‘எங்க இருக்கீங்க?’ என ஆடிட்டர் Pennathur Subramaniam Prabhahar இடமிருந்து போன். நான் வரும்வரை காத்திருந்தார், பரஸ்பர விஜாரிப்புக்களுடன் விடைபெற்றோம்.
முதல் தளத்தில் வரவேற்பு நிகழ்ச்சி. எடப்பாடி தலைமையில் பொதுக்குழு போல சரிய்யான கூட்டம். நம் முகநூல் நண்பர்கள் யாரும் கண்ணில் படவில்லை. டென்ஷன் இல்லாமல் ரிலாக்ஸ்டாக எல்லோரையும் வரவேற்ற ஜேயார் ‘ஶ்ரீதர்! மேல போய் சாப்ட்டு வந்துடுங்கோ, இங்க கூட்டமா இருக்கு’ என்றதும் படியேறி இரண்டாம் தளம் போனால் அங்கேயும் கூட்டம். பந்தி ஜரூராக ஓடிக்கொண்டிருக்க, நண்பர்கள் Tiruchendurai Ramamurthy Sankar , Vallabha Srinivasan, V.K.S , Vijayaraghavan Krishnan , Krishnamurthy Krishnaiyer , Ananya Mahadevan எல்லோரையும் டக்கென கேமராவில் க்ளிக்கினேன். ‘சாம்பார் சாதமும் தயிர்சாதமும் ஏஒன்’ என விஜயராகவன் சொல்லியபடியே கையலம்ப ஓடினார்.
கல்கி ஆசிரியர் Ramanan Vsv சார் தூரத்திலிருந்து கை காட்ட அவரிடம் ஓடி மிஸஸ் ரமணன் மற்றும் பேரன், பேத்தியுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தவரை படம் பிடித்தேன். இசைக்கவி
ரமணன் சாரும் அவர் பின்னால் நிற்கே சட்டென ஒரு க்ளிக். ‘எப்பிடிஇருக்கீங்க ஶ்ரீதர்!’ என யோரோ தோளைத்தட்ட.. அட நம்ம க்ளிக் ரவி சார்! உஷாவிடம் ‘உஷா! ஜானி படத்தில் பூப்போட்ட வெள்ளைப்புடவை ஶ்ரீதேவியை ஸ்டில் போட்டோ எடுத்தது சார் தான். அதே படத்தை நான் வரைந்தபோது ரவி சார் என்னிடம் சொன்னது’ என சொல்லிக்கொண்டே படாரென ஓடி பந்தியில் இடம் பிடித்தோம்.
ஒரு ஆளுக்கு இரண்டு இலை போடலாமென சொல்லும் அளவிற்கு பதார்த்தங்கள். சின்ன மண்சட்டியில்
இளநீர் பாயசம். மக்கள் அதை கபளீகரம் செய்து அடுத்த சர்விங் எதிர் பார்க்கும் அளவிற்கு ருசி. ஜேயார் தன் பதிவில் குறிப்பிடும்.. அதான்! தன் ஆதர்ச குருவும் எழுத்துச்சித்தர் பாலகுமரன் அவர்கள் ஆசையுடன் இவருக்காக வீட்டிற்கு வாங்கி வரும் மால்புவா அன்றைய ஸ்பெஷல் ஐட்டம். சடுதியில் தொண்டையில் வழுக்கி மறைந்தது. பால்கோவாவை கர்ப்பம் தரித்த லிச்சி பழம் வித்தியாசமான டேஸ்ட். சுடச்சுட தக்காளி சூப்பும் மீட்டா சட்னியுடன் குட்டி சமோசாவும் ஸ்டாட்டர்ஸ். வரிசையாக வரும் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி போல கொத்து பரோட்டா, சப்பாத்தி குருமா, மஞ்சூரியன், புலாவ், பிசிபேளேபாத், தயிர்சாதம், கட்லெட், அப்பளம், ரசம், சட்னி வகைகள் எல்லாம் முடித்து டெசர்ட்டுக்கு வயிற்றுக்கு இடமில்லாமல் கீழ்த்தளம் வந்தோம்.
மேடையில் மணமக்களுடன் ஜேயார்-லதா தம்பதி கல்யாண களைப்பு ஏதுமில்லலாமல் ரிலீக்ஸ்டாக சீயர்ஃபுல்லாக இருந்தனர். ஜேயார் எங்களை மணமக்களுக்கு அறிமுகப்படுத்தும் முன்னரே ‘தெரியும்ப்பா! ஶ்ரீதர் ட்ராஃப்கோ ’ என திக்விஜயே தன் புதுமனைவி தீபிகாவிற்கு அறிமுகப்படுத்தினான். ‘இப்ப ட்ராஃப்கோ இல்லப்பா, பழைய சீதாபதி ஶ்ரீதர் தான்’ என சொல்லிக்கொண்டிருக்காமல், அடுத்து பரிவுடன் எங்களை வரவேற்ற ஜேயாரின் தங்கை Bhavani Anantharaman அவர்களை உஷாவிற்கு அறிமுகப்படுத்தினேன். ‘நீங்க சொல்லாமலேயே அவங்க டான்ஸ் டீச்சர்னு கண்டுபடிக்கலாம். ஏன்னா அவ்வளோ எக்ஸ்ப்ரஸிவ் ஐய்ஸ்’ என உஷா சொன்னதை பாவானிக்கு சொல்ல முடியவில்லை, அவ்ளோ கூட்டம். மேடையை விட்டு கீழே வந்தால் நண்பர் Prasad Swaminathan மனைவியுடன் நின்றிருந்தார். முதல் சந்திப்பு அவருடன். வாஞ்சையுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அடுத்து திருச்செந்துரை சங்கர், விஜயராகவன், வல்லபா, வீகேயெஸ், குருசி ஆர்வி, அனன்யா, ரங்ஸ், கேகே, சித்ரா, பவானி, கோபு, ஆர்விஎஸ், சங்கீதா என எல்லா முகநூல் நண்பர்களுடன் போட்டோக்கள் எடுத்துக்கொண்டு விடைபெற்றுக்கொண்டோம்.
No comments:
Post a Comment