2014.. 15 களில் இவரது கதைகளும் கட்டுரைகளும் படிக்க ஆரம்பித்தேன். பரஸ்பர நண்பர்கள் எங்களுக்கிடையே இருந்தாலும் இவருடன் நேரடித்தொடர்பு இல்லாமல் இருந்தது. ஹெவி ப்ரொஃபைல்க்காரர் என்பதால் கொஞ்சம் பயத்துடன் இவரை அணுக, சகஜமாக பேச ஆரம்பித்தார். போதாதா நமக்கு! அவருடைய பேட்டையான அடையாரிலேயே ஒரு காஃபி ஷாப்பில் இவரை முதன்முதலில் சந்தித்தபோது படு வாஞ்சையுடன் வெகுநாள் நெருங்கிய நண்பர் போல பேச ஆரம்பித்தார்.
அடுத்த சில மாதங்கள் இவர் பஹ்ரைன் சிஏ மற்றும் சிஎம்ஏக்களுக்கான கான்ஸப்ரன்ஸில் பேச்சாளராக வர, இவரை அங்கேயும் சுற்றி வளைத்து என்கௌண்ட்டர் செய்து எங்கள் இல்லத்தில் நண்பர்களுடன் ஒரு லஞ்ச்சியன் சந்திப்பு. மாலை பஹ்ரைன் தமிழ்ஆர்வலர்களை அழைத்து சுஜாதா பற்றி இவரை பேச ஏற்பாடு செய்து மறுநாள் உள்ளூர் செய்தித்தாளில் அந்த வைபவம் புகைப்படத்துடன்..
ஒரு நாள் மயிலை கற்பகாம்பா மெஸ்ஸில் அகஸ்மாத்தாக சந்திப்பதும், ஒருநாள் துபாய் ஏர்போர்ட்டில் நான் பார்சிலோனா விமானம் பிடிக்க ஓடும்போது லௌஞ்சில் ‘ஹலோ ஶ்ரீதர்’ என்ற சத்தம் வர, ஜெர்மனி போக மனைவி லதாவுடன் எதிர்த்திசையில் ஓடிக்கொண்டிருந்த இவருடன் அவசர சந்திப்பு முடிந்து தபதபவென ஓடி விமானம் பிடித்தேன். பாண்டிபஜார் சுபைதாவில் மனைவியுடன் சுடிதார் வாங்கிக்கொண்டிருக்கும்போது ‘ஶ்ரீதர்’ மெட்ராஸ் வந்திருக்கீங்க போல.. வீட்டுக்கு லஞ்ச்சுக்கு வாங்க.. இங்க கே.கே Krishnamurthy Krishnaiyerம் Chitra Krishnamoorthy யும் உங்களுக்காக வெயிட்டிங்’ என்ற இவரது போனைத்தொடர்ந்து ட்ரையல் ரூமிலிருந்த மனைவி Usharani Sridharஐ அப்படியே சுடிதாருடன் சுருட்டிக் கொண்டு ஓடிப்போய், இவரது அப்பா (80) சாதம் பரிமார லஞ்ச்சை வெட்டியது மறக்க முடியாத அனுபவம்.
வசுந்தராவுக்கும், நீரஜாவுக்கும் (இவரது கதா பாத்திரங்கள்) உயிர் கொடுத்தால் இன்று இவரது பிறந்தநாளை விமரிசையாக கேக் வெட்டி, சுஜாதா மற்றும் பாலகுமரன் (உயிருடன் இருந்திருந்தால்) பிரதான விருந்தாளிகளாக கொண்டாடியிருப்பார்கள். பாலகுமரன் வழக்கம் போல கையோடு கொண்டு வந்திருந்த ஸ்வீட் டப்பாவை திறந்து இன்னும் 2 எடுத்துக்கோ என இவருக்கு கொடுத்திருப்பார்.
டாக்டர் வைகுண்டம் மற்றும் அவரது அசிஸ்டென்ட் நர்ஸ் ஆவ்ரில்லுக்கு உயிர் கொடுத்திருந்தால் இன்று மாலை பெங்களூர் கஸ்தூரி நகர் டாக்டர் கலைவாணியிடம் போகாமல் டாக்டர் வைகுண்டத்திடம் ப்ரிகாபலின்-75 (கை, தோள் பட்டை நரம்பு வலி) மாத்திரைக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் வாங்கி வந்திருப்பேன்.
டாக்டரை பார்த்து விட்டு, பக்கத்தில் செந்தூர் ஓட்டலில் ஆனியன் ரவா சாப்பிடும்போது இரவு மணி எட்டரை.. வீட்டுக்கு போய் ஜேயார் பிறந்தநாள் போஸ்ட் போடனும் என நினைத்துக்கொண்டு வீடு வந்து, சட்டென பென்சில் எடுத்து 20 நிமிட ஓவியம். பட்டையான பென்சிலில் வரைந்தால் நிழற்படமாக சீக்கிரம் முடிக்கலாம். ஆச்சு.. ஓவியம் முடிய மணி பத்து. சரி.. கூடவே நாலு வார்த்தை எழுதி பதிவிடலாமே என எழுதி… இத்துடன்!
No comments:
Post a Comment