Sunday, June 22, 2025

150 அஇட உயரத்தில் குளிர்பானம்

 CAக்கு நிகரான அமெரிக்க CPA படித்து 20 வருடங்கள் பஹ்ரைன் வாசம், எங்களது பஹ்ரைன் ட்ராஃப்கோ குழுமத்தின் துணை நிறுவனங்களொன்றின் பொது மேலாளராக இருந்து, சென்ற வருடம் பாரதம் திரும்பிய மங்களூர்க்கார்ரான இந்த ப்ரவேஷ் மஞ்சேஷ் Pravesh Manjesh இன்று 40க்கும் அதிகமான பணியாளர்களுடன் தனது சொந்த வியாபாரமான Skydining mangalore துவங்கி இரண்டாவது கிளையையும் திறந்து விட்டார்.

என்ன வியாபாரம்? ராட்சத க்ரேன் மூலம் நம்மை, நாம் சாப்பிடும் தட்டு, டம்ளர் டேபிள்களுடன் ஜிவ்வென 150 அடி உயரத்திற்கு தூக்கி, வானத்தில் சுமார் ஒரு மணி நேரம் குளிர் பானங்கள் பருக வைத்து, உணவு பரிமாறி, போட்டோ வீடியோ எடுக்க, நாம் கால்களை அந்தரத்தில் தொங்க வைத்து பயத்துடன் கீழே பார்க்க, லேசாக வயிற்றை கலக்க, ஜில்லென சிலிர்ப்புடன், லேசான தலை சுற்றலுடன் கீழே அழகிய பனம்பூர் கடற்கரை, கடலலைகள், மக்கள் கூட்டம் எல்லாவற்றையும் கலவரம் கலந்த இன்பத்துடன் கண்டுகளித்து, போதாக்குறைக்கு அப்படியே கரகாட்டம் போல 360 டிகிரி சுற்றி, மெதுவாக கீழே இறக்கப்படுவோம்.
சிலிர்ப்பூட்டும் அனுபவம்! வளைகுடா வேலைக்கும் இந்த மாதிரியாக முதலாளியாக இருப்பதற்கும் வித்தியாசம் தெரிகிறதா என நான் கேட்டு முடிப்பதற்குள், 40 பேருக்கு சம்பளம், வியாபாரத்தை அபிவிரித்தி செய்ய உந்துதல், மன நிம்மதி இதெல்லாம் இருக்கே என்றார் ப்ரவேஷ்.
இந்த நிம்மதியான தொழில் துவங்குவதும் அவ்வளவு சுலபமல்லவாம். அரசாங்க ஒப்புதல் பெற அலைச்சல், க்ரேன் போன்ற இயந்திரங்கள் வாங்க முதலீடு, பல உயிர்களை உயரத்தில் தூக்கும் அபாயகரமான சமாச்சாரம் என்பதால் அதற்கான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என ஏகப்பட்ட செயல்முறைகள் அனைத்தையும் தாண்டித்தான் இப்படி முதலாளி ஆக முடிகிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் இது முதன்முறையாகவாம். இதுபோல சென்னையிலும் துவங்கப்பட்டிருக்கிறதாம். மேலும் நிறைய கிளைகளுடன் இந்த சுயதொழிலில் முன்னேற்றமடைய வாழ்த்துக்கள் ப்ரவேஷ்!
கூட வந்திருந்த பஹ்ரைன் நண்பர்கள் முத்துக்குமார்- ஷ்யாமளா மற்றும் சேது-சித்ரா தம்பதிகள் இந்த அனுபவத்தை வெகுவாக ரசித்தார்கள்.
அதுசரி.. உள்ளூர் மங்களூர் சாப்பாடு பற்றி? வரும்..

No comments:

Post a Comment