என்னம்மா.. மணி ஏழாச்சு.. இன்னும் எழுந்திரிக்கலையா? அடடா.. டெம்பரேச்சர் இருக்காறா மாதிரி தெரியுதே!.. சுடு தண்ணி வெச்சு தர்றேன்.. ஒரு பாராசிட்டமால் போட்டுட்டு நல்லா தூங்கு.. பசங்களுக்கு ப்ரெட் இருக்கு.. நா சமாளிச்சிக்கறேன். எனக்கா? நீ கவலப்படாத.. A2Bல மினி டிஃபன் சாப்ட்டு ஆபீஸ் போயிக்கறேன்..' (நெய் சொட்ற பொங்கல் சாப்ட்டு ரொம்ப நாளாச்சு!)
'என்னாச்சும்மா? ஓடம்புக்கு முடியலயா? சாதம் மாத்திரம் தான் வெச்சிருக்கியா? பரவாயில்ல.. நீ போயி அப்பிடி ஒக்காரு. சுருக்க ஒரு வத்தக்குழம்ப மட்டும் வச்சிர்றேன். நேத்திக்கி அந்த அகர்வால் பொண்டாட்டி, வாயில வெக்கமுடியாத மாதிரி ஏதோ சப்ஜி குடுத்தான்னு சொன்னியே.. ஃப்ரிட்ஜ்ல அப்பிடியே இருக்கு. அதையே தொட்டுக்கலாம். சப்பாத்தி மாத்தரம் நாலஞ்சு அவளையே பண்ணித்தரச்சொல்லிட்டு இதோ வந்துடறேன்’ (அவளையும் பார்த்து ரொம்ப நாளாச்சு!
).

'உன் சாமர்த்தியம் யாருக்கு வரும்டி செல்லம்? காலேஜ் மாறுவேட போட்டியில நீதான் எப்பவும் ரெண்டாவதா வருவியாமே! உங்கம்மா சொன்னாங்க. (மாறுவேடமே போடாம போயிருந்தா ஒனக்குத்தான மொத பரிசு கெடச்சிருக்கும்!)
‘என்னம்மா BP செக்கப்பா! அதெல்லாம் உனக்கு வரவே வராது (உன்னால எனக்கு வந்தாத்தான் உண்டு). சரி! நம்ப க்ளப் ஹவுஸ்ல அப்போல்லோ கிளினிக் போய் செக்கப் பண்ணிடலாம். எனக்கும் சேர்த்து (அந்த மலையாளி சேச்சி வீவுலர்ந்து வந்துட்டாளாம்!
)

இந்த ஆண்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் மகளிரை பேணிக்காக்கும்(!) உங்களையும் Women’s Day யன்று வாழ்த்துவோம்.....

No comments:
Post a Comment