Thursday, June 2, 2016

சுஜாதா...நினைவில் நின்றவை...

பிப்ரவரி 27...சுஜாதா அவர்கள் நினைவு தினம்...(எனது பிறந்த நாள்)
நினைவில் நின்றவை...
ஶ்ரீரங்கத்தில் பள்ளிப்படிப்பு. நினைவில் இருப்பது: பக்கத்துப்பையனை சேஃப்டி 'பின்'னால் தொடையில் குத்தியபோது அவன் அலறியது. மானிட்டருடன் ஹெட்மாஸ்டரிடம் 'கேஸ்' போனது. காது சற்று மந்தமான ஹெட்மாஸ்டர், மானிட்டர் கூறியதை தவறாகப்புரிந்துகொண்டதால், 'பின்'னால் குத்தப்பட்டவன் செம்மையாக அடி வாங்கியது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பௌதிகம் பி.எஸ்.ஸி. பட்டம். கல்லூரியில் இருந்த மலைப்பாம்பும், ஃபாதர் எட்ஹார்ட்டின் மூக்கு நுனியின் ஆப்பிள் சிவப்பும் நன்றாக நினைவு இருக்கிறது. ( பாவம், சமீப வெள்ளத்தில் மூழ்கி அந்த பாம்பு இறந்துவிட்டது)
குரோம்பேட்டை எம்.ஐ.டியில் எலெக்ட்ரானிக்ஸ் படித்தபோது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி: 'ராத்திரி ஒன்பது மணி சுமாருக்கு நண்பர்கள் சினிமாவுக்கு அழைக்க, அலறி அடித்துக்கொண்டு ஓடினேன். டிக்கெட் வாங்கி விட்டதாகக்கூறி, விசில் முடிந்து புறப்பட தயாராயிருந்த எலெக்ட்ரிக் ட்ரெயினில் என்னை ஏற்றி விட்டு அவர்கள் 'டாடா' சொல்லிவிட்டு, பிளாட்பாரத்திலேயே தங்கிவிட்டார்கள். நான் டி.டியிடம் மாட்டிக்கொண்டு, சகல சொத்துக்களையும் இழந்து, பனியனுடன் பல்லாவரத்திலிருந்து நடந்தே வந்தேன். நண்பனின் அறைக்கதவை தட்டி, எழுப்பிக்கேட்டபோது வந்த பதில் 'ஸாரிடா...'
ஆனந்த விகடனில்..! 11.12.77
(விகடன் சுஜாதா மலரிலிருந்து)
பி.கு: ஓவியத்தை வரைந்த பின் அவரது கையொப்பத்திலிருந்தே எனது கையெழுத்தையும் போட ஒரு முய

No comments:

Post a Comment