Thursday, March 19, 2015

திருத்தணி..

திருத்தணி முருகன் தரிசனம் மதியம் 3 மணிக்கு முடிந்து பக்கத்தில் ஜியார்டி ரெசிடென்ஸி போகும்போது நல்ல பசி. ஹோட்டல் சிப்பந்திகள் பேயறைந்த மாதிரி தெரிந்தார்கள். தென்னிந்திய மற்றும் வட இந்திய தாலி கொண்டு வந்து எங்கள் முன் வைத்து பாதி சாப்பிட்டவுடன் ரோஸ்மில்க் வைத்தார்கள். அது வெல்கம் ட்ரிங்க்காம்.
அங்கிருந்து கிளம்ப 4 மணியாகிவிட்டது. கார் டிரைவருக்கு பக்கத்தில் முன்னிருக்கையில் நான். பின்னால் உஷா மற்றும் அவளது பெற்றோர். அதற்குப்பின்னால் பிரஷாந்த் மற்றும் ப்ரணவ்.
அடுத்த பத்து நிமிடங்களில் திருத்தணி விட்டு ஊருக்கு வெளியே சத்திய சாட்சி கந்தன் தியான மண்டபம் சென்றடைந்தோம்.
ஏற்கனவே வயிறு ஃபுல்.. இனி தியானமாவென யோசித்து வண்டியிலிருந்து இறங்கலாமா வேண்டாமா என தயங்கி தூரத்தில் 'செறுப்பு வைக்குமிடம்' போர்டை பார்த்தோம். அதற்கு பக்கத்தில் ' இங்கு பாம்புகள் நடமாட்டமுண்டு.ஜாக்கிரதை' போர்டு. பக்கத்தில் யார் செறுப்பை விடுவார்கள்? போர்டை விட அதிலுள்ள பாம்புப்படம் பார்க்க இன்னும் பயமாக இருந்தது. காருக்குள்ளிருந்த என் மாமனார் தன்னையறியாமல் காலை குனிந்து பார்த்துக்கொண்டார். காரை விட்டுறங்காமல் அப்படியே கிளம்பினோம்.
அடுத்த இரண்டு மணிநேரம் சென்னை போய்ச்சேரும் வரை ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள ஏராளமான கடைகளையும் கடைகளின் பெயர்களையும் ரசித்துப்பார்த்தபடி சென்றேன்.
ஒண்டிக்குப்பம் மணவாளநகர் (திருவள்ளூர்) நெறுங்கும்போது 'பாலச்சித்தர் தமிழ் மருந்துக்கடை' வாசலில் யோகி ஒருவர் பாக்கெட்டில் பீடிக்கட்டுடன்..
அரண்வாயல்குப்பம்- 'ஆண்டவர் சைக்கிள் ஒர்க்ஸ் அன்டு பஞ்சர் கடை' க்காரர் டாஸ்மாக் நோக்கி ஒடிக்கொண்டிருந்தார்.
'ப்ளாட்டுகள் விற்பனைக்கு'..ஊருக்கு வெளியே.. ப்ளாட் போட்டு சுற்றிலும் கேட் அமைத்து குழந்தைகள் விளையாடும் சீஸா, ஊஞ்சல்... ..இவர்களை நம்பலாமா? சப்தகிரி என்க்ளே..வ்...நம் பணத்தை சாப்பிட்டு 'ஏவ்' தானா?
உக்கோட்டை தாபா சென்டர்- பெயர்ப்பலகை முழுக்க சிகப்புக்கலரில் நெறுப்பு படம். அவ்வளவு ஸ்பைஸியாம்.
அடுத்து ஜமீன்கோட்டுப்புரம் வரை எங்களை முந்தவிடாமல் ஒரு லாரி. லாரிக்குப்பின்னால்' இருக்கும்வரை ரத்த தானம், இறந்ததும் உடல் தானம்' வாசகம்( மொத வழிய விடுங்கப்பா)
கீழமணம்பேடு.. 'தருன் சிக்கன் & மட்டன் சென்டர்' வாசலில் 'பீப் பகோடா' ரெடி. பீப்ன்னா என்ன? Beef ஆம்.
'ஆண்டாள் கைராசி துணிக்கடை' போர்டில் கரினா கபூர் பாதி உடையில்..
'அம்பேத்கார் இரவு பாடசாலை' பூட்டப்பட்டிருந்தது. (மாலை மணி 7)
அடுத்த ஒரு கி.மீ தூரம் வழிநெடுகிலும் 'தேவன் ஒருவரே' போஸ்டர்கள் ( அவர் ரெண்டு பேர்னு யார் சொன்னது?)
'வள்ளலார் ஃபெர்டிலைஸ் சென்டர்' (குழந்தையின்மைக்கு இங்கு முழுமையான தீர்வு).. அடப்பாவிங்களா.! அதுக்கு வள்ளலார் எதுக்கு? பக்கத்திலேயே 'வேலைக்கு ஆட்கள் தேவை' போர்
டு வேற...
வேப்பஞ்சாவடி பொது வியாபாரிகள் சங்கம்.. 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டரில் சிரித்தவாறு ஒரு பெண்..
மதுரவாயல் ரோட்டில் நிறைய ஆட்டோமொபைல் கடைகளுக்கு நடுவே 'பெரியநாயகி பாடி கட்டும் மையம்' (அட.. லாரிக்குங்க)
நெல்சன் மாணிக்கம் ரோடு.. 'வள்ளுவர் இயல்பாடைகள்'.. அதாவது கேஷுவல் டிரெஸ்ஸாம்..(வள்ளுவர் பொருத்தமானவர்)
மங்கை ஆர்த்தே(?)பீடிக் மையம்.. ( இவர்களே காலை ஒடித்துவிட்டார்கள்)
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு மையம்..(குழந்தைகளை எப்படி ஒருங்கிணைப்பது)
ஒரு வழியாக தி.நகர் வந்து சேர மணி 8...
இரவு வணக்கங்கள்..

No comments:

Post a Comment