Thursday, March 19, 2015

மியூசிக் அகாடமி

தி. நகரிலிருந்து கிளம்பி மனைவியுடன் கொஞ்சம் ஷாப்பிங் செய்துவிட்டு, Durga Ganapathi Subramanianஐயும் அழைத்துக்கொண்டு அவசர அவசரமாக மியூசிக் அகாடமி போய்சேர கொஞ்சம் லேட்டாகி விட்டது. நல்ல கூட்டம்.. டிக்கெட் வாங்குமிடத்திலும் கொஞ்சம் கூட்டம்.
'இசையோடு சுருதி சேரு.. மிரின்டாவோடு கலாட்டா சேரு' அஸினைத்தாண்டி, கியூவில் நின்று டிக்கெட் வாங்கிக்கொண்டு கொஞ்ச நேரம் வெயிட் செய்து ஒரு வழியாக இருக்கையில் அமர்த்தும் எதிரே
.
.
.
.
.
.
.
.
வாழையிலை போட்டார்கள்.
ஹி..ஹி..மொத சாப்பாடு..அப்பறம் தான் கச்சேரி..
கொண்டித்தோப்பு மின்ட் பத்மநாபன் கேட்டரிங்காம். சாம்பார், ரசம், தயிர் போன்ற அன்றாட சமாச்சாரங்கள் தவிர தே.சாதம், மோர்க்குழம்பு போண்டா, கோஸ் வேர்க்கடலை கூட்டு, செள செள தயிர் பச்சடி, கோவக்காய் ரோஸ்ட், மரவள்ளிக்கிழங்கு குச்சி சிப்ஸ், சேனை மிளகுக்குழம்பு, கேரட் கீர், பச்சைமிளகாய் தொக்கு... கடைசியில் பிஸ்தா கேக்..
ஆஹா.., சாப்பிட ஐந்து விரலும், கடைசியில் மோர் குடிக்க இடமும் பத்தாதுங்க. இலையில் மிச்சமிருந்த சேனை முளகுக்குழம்பை அப்படியே விட மனமில்லாமல், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு... ஒரு ஸ்வைப்...வாயைத்துடைத்துக்கொண்டேன். இருநூறு ரூபாய்க்கு சாப்பாடு தேவாமிர்தம். திரும்ப திரும்ப கேட்டு பறிமாரினார்கள்.
அந்தப்பக்கம் இதே ஐட்டங்கள் கோம்போவுடன் வட்டமேசை மாநாடு.
மெல்ல ஹாலுக்குள் நுழைந்தோம். பரூர் அனந்தகிருஷ்ணன் வயலின், தஞ்சை ப்ரவீன் மிருதங்கம், ராமானுஜம் மோர்சிங் சகிதம் பரத் சுந்தரின் கோம்போ அருமை..
கிரி டிரேடர்ஸில் சுந்தர காண்டம் புத்தகங்கள் நம் பஹ்ரைன் நண்பர் Pillai Iyengar Sundararajan னுக்காக வாங்க அங்கிருந்து கிளம்பினோம்.
நாளை Ganapathi Subramanian னுடன் திரும்ப மியூசிக் அகாடமி வருவதாக ப்ளான் இப்போதைக்கு.
நாளை...கடம் கார்த்திக்+சஞ்சீவ் +உமையாள்புரம்+சிக்கில்=சக்கரை பொங்கல் சார்...
உமையாள்புரம் சிவராமன் அவர்களைத்தவிர மற்றவர்கள் பஹ்ரைன் வந்திருக்கிறார்கள்.
நாளை கச்சேரியைப்பற்றி விஸ்தாரமான அறிவுத்திறனுடன் ஸ்னிப்பெட்ஸ் எழுத நான் ஒன்றும் கைப்புள்ள.. Rajagopalan Venkatraman அல்ல..
அவர் உள்ளே நிரவல் பற்றி எழுதினால் நான் வெளியே வறுவல் பற்றித்தான் எழுத முடியும்...

No comments:

Post a Comment