Wednesday, August 13, 2014

கார்த்திகேயன் மீனாக்ஷி சுந்தர் (கோவை)

கோவை RS புரம் போஸ்ட் ஆபிஸ் எதிரே இவரை சந்தித்து பக்கத்திலுள்ள காஃபி டேயில் அமர்ந்து பேசலாமென முடிவு செய்தோம்.
அந்த ஒரு மணி நேரம் வழக்கம்போல குடும்பத்தினரை ஏதாவது மால் அல்லது புடவைக்கடையில் விட்டுவிடலாமென முடிவு செய்து, புடவைக்கடையில் விட்டுவிட்டால் நமக்கு நிறைய நேரம்()கிடைக்குமென்பதால் PSR சில்க்ஸ் வாசலில் இறக்கிவிட்டு RS புரம் வந்தேன்.

போஸ்ட் ஆபிஸ் எதிரே நின்றிருந்த என்னை தன் காரிலிருந்தபடி அவர் கைப்பேசியில் கூப்பிட அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் ஒரு காஃபி டேயில் செட்டிலானோம்.

இவர் எனக்கு எப்படி முகநூல் நண்பரானார்?ஆரம்பத்தில் ஃப்ரென்ட் ரிக்வெஸ்ட் அனுப்பும் முன்னேயே என்னுடைய பதிவுகளுக்கு நிறைய லைக் போட்டவர். பிறகு நண்பரானார்.

இவரது ஆங்கிலப்புலமை, ஆங்கில எழுத்தாற்றல் என்னை மலைக்க வைத்தது. பதிவுகளின் நடுவே பிரெஞ்சு வாக்கியங்கள் அடிக்கடி எடுத்து விட்டு நம்மை அசத்துவார். டென்னிஸ் மற்றும் கால்பந்தாட்ட ரசிகர். இவான் லென்டில், பாட் காஷ், ஆன்ட்ரெ அகஸ்ஸி, மெக்கென்ரோ, ஸ்லோபதான் சிவோயினோவிக் போன்ற டென்னிஸ் வீர்ர்களின் ஸ்டைல் மற்றும் ரெகார்டுகள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி.

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியை தினமும் தனது சுவற்றில் அலசினார். அவ்விளையாட்டின் நுனுக்கமான விபரங்களை எல்லோருடனும் பகிர்ந்துகொண்டார்.

தனது சொந்த கம்பெனி ஒன்றை நடத்துகிறார் அதன் CEOவான இவர். சில மருந்துப்பொருட்களை மற்ற கம்பெனி மூலம் தயாரித்து சுமார் 12 விற்பனையாளர்களை வைத்துக்கொண்டு விநியோகம் செய்கிறார். இந்தியாவின் பல பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்து தனது தொழில் விருத்தியடைய உழைக்கிறார்.

பீகார், கல்கத்தா என நிறைய வட மாநிலங்களுக்கு விஜயம் செய்வதால் அதைப்பற்றி அழகாகவும் எழுதுகிறார். சினிமா பற்றி ஏகப்பட்ட சமாசாரங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் பாரதிராஜா அவர்களைப்பற்றி அவரது பிறந்தநாளன்று ஒரு பதிவும் இட்டிருந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டருந்து விட்டு திருச்சிக்காரரான இவருடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். விடைபெறும் முன் ஒரு ஃபளாஷ் டிஸ்க்கை எனக்கு பரிசாக அளித்தார். கோவையில இருந்து திருச்சி திரும்பும்போது அவர் பரிசளித்த பென் ட்ரைவை காரில் ஓடவிட்டேன். ஆஹா...அந்த 3, 4 மணி நேரம்..என்ன ஒரு ஆடியோ வெரைட்டி....!
தண்டபாணி தேசிகரின் திருவாசகம்,
வேளுக்குடி கிருஷ்ணனின் 'விதூர நீதி' 25 பாகங்கள், சுகி சிவம்-பகவத்கீதை, நாராயணீயம், எம்.எல். வசந்தகுமாரியின் தாலாட்டுப்பாடல்கள், சிவனையும் அரங்கனையும் போற்றிப்பாடப்பட்ட எக்கச்சக்கமான பாடல்கள்...கிரிவலமகிமை, திருப்படையாட்சி, குலப்பத்து,அன்னாமலையார் அற்புதங்கள், திருச்சதகம் அனுபோகஸ்துதி....

எப்பிடி சார் எனக்கு ஃப்ரெண்டா கெடச்சீங்க Karthikeyan Meenakshi Sundar?

No comments:

Post a Comment