Wednesday, August 13, 2014

கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணய்யர் & சித்ரா கிருஷ்ணமூர்த்தி

ட்ராக் சூட் பாண்ட்..மேலே ஒரு டீ ஷர்ட்..அலட்சியமாக மடிக்காமல் விடப்பட்ட காலர்...உடலை கட்டுடன் வைத்திருப்பதில் மிகுந்த அக்கரை...தலைமுடி சீராக வாரி கண்ணாடியனிந்து, தொப்பையேதுமில்லாமல் பக்காவாக BMI மெயின்டெயின் செய்பவர், கார்பரேட் எக்ஸிக்யூடிவ்ஸ்டைலுடன் சரளமான ஆங்கிலம்.. நடுநடுவே நிறைய நகைச்சுவை..கலகலவென சிரிப்பு முகத்துடன் பேச்சு.. மற்றவர்களின் ப்ளஸ் பாயின்டுகளை தாராளமாக தயங்காமல் குறிப்பிட்டு புகழ்தல்.. அந்த ஒரு மணி நேரத்தில் இத்தனையும் கவனித்தேன் இவரிடம்.

'பெரியவா பாத்துப்பா' தொடரை தொடர்ந்து எழுதிக்கொண்டு காஞ்சி மகாப்பெரியவரின் மகிமையையும் புகழையும் பரப்பி தம் முகநூல் நண்பர்களுக்கு விருந்தளிப்பவர். ஶ்ரீமதி.ராஜலக்ஷ்மி விட்டல் மாமி அவர்களுடன் சேர்ந்து சண்டி ஹோமம், அம்பாள் திருக்கல்யாணம், அன்னை ஶ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்,கஜபூஜை போன்ற நிறைய ஆன.மிக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர். 'அழகிய மணவாளம்' தொடரை படு ஸ்வாரஸ்யமாக எழுதி பட்டையைக்கிளப்பியவர். 'டேய் மாதவா', 'கே.கே... சில குறிப்புகள்' என தன்னுடைய வித்தியாசமான ஸ்டைலில் நிறைய பதிவுகள் பதித்துக்கொண்டிருப்பவர்.

100 feet ரோடு வந்து அவர்களுக்கு போன் போட்டவுடன் கே.கே (Krishnamurthy Krishnaiyer) யும் அவரது மனைவி Chitra Krishnamurthyயும் போனில் மாறி மாறி வழி சொன்னார்கள்..'லெஃப்ட் எடுத்து கணபதி வந்து பஸ் ஸ்டாண்டைத்தாண்டி நேரா வந்து பி.எஸ்.என்.எல் கிட்ட ரைட் எடுத்து அந்த பேங்க் ஏ.டி.எம் தாண்டி உள்ள வந்து கடைசி லெஃப்ட் எடுத்து கொஞ்ச தூரம்..பாண்டியன் ஸ்டோர் இடது கைப்பக்கம் வந்தவுடன அங்க ரைட் எடுத்து நேரா வந்தா எங்க காம்பவுன்டு கேட் வரும்'....ஆஹா...வாசல் வரை வந்து என்ன ஒரு வரவேற்பு..

எங்கள் குடும்பத்தவர் அனைவரைப்பற்றியும் நான் சொல்ல சொல்ல பொறுமையாக கேட்டு தன் குடும்பத்தவர் பற்றியும் சொன்னார். கூட வந்திருந்த எனது மனைவி, மகன., என் சகோதரி, அவளது பெண் (பல் மருத்துவர்) என எல்லோரையும் அக்கரையுடன் விசாரித்தார். மற்ற முகநூல் நண்பர்களைப்பற்றியும் நிறைய பேசினோம். உட்லண்ட்ஸ் ஹோட்டல் முகநூல் நண்பர்கள் சந்திப்பை விட கோவை சந்திப்பு அருமை என நான் சொன்னால் கே.கே. சந்தோஷப்படுவார். ஆனால் சென்னை வழியாக நான் பத்திரமாக பஹ்ரைன் திரும்புவது சந்தேகம் தான்.

ஜிம்முக்கு போய்விட்டு படு ஹான்ட்ஸமாக வந்தார் இவர்களது கடைக்குட்டிப்பையன் நந்து. மெக்கெட்ரானிக்ஸ் படிக்கும் இன்ஜினியரிங் மாணவன்.. அப்பாவை கலாய்க்கிறார்..தயக்கமில்லாமல் எங்களுடன் கலந்துரையாடி போட்டோவெல்லாம் எடுத்தார் ஜூனியர் கே.கே.

சமையலறை அருகேயுள்ள பூஜையறை உள்ளே நிறைய ஸ்வாமி படங்கள், பெரியவா படங்கள், ஸ்ருங்கேரி ஸ்வாமிகள் படங்கள். அம்மாவிடம் நம்மை அறிமுகப்படுத்தினார் கே.கே. நான் அவருக்கு அளித்த காஞ்சி மகாமுனிவரின் படத்தையும் அம்மாவிடம் காட்டினார்.

விஸ்தாரமான வில்லா ..சுற்றிலும் மரம் செடிகொடிகள்..காலையில் வீட்டின் கேட் மேல் சிலசமயம் மயில் வந்து அமர்ந்து அகவுமாம்(முன்பு போட்டோ பார்த்திருக்கிறேன்) சின்ன குழந்தைகள் இல்லாத வீடு என பார்த்தவுடன் சொல்லும் அளவிற்கு பராமரிப்பு..ஏற்கனவே பெரிய ஹாலாக இருந்தாலும் அளவான மற்றும் தேவையான ஃபர்னிச்சர் மட்டுமே இருப்பதால் மிகவும் விசாலமான பட்டாசாலை..மற்றொரு அறையின் சுவற்றில் அவர்களது மருமகள் வரைந்த ஓவியம் மிக அருமை.
சிவதாண்டவமாடும் ஈசனின் ப்ரம்மாண்டமான ஓவியம் அந்த இல்லத்திற்கு கூடுதல் சிறப்பு... ஹாலின் ஒரு பகுதியில் மாடியிலிருந்து வளைந்து கீழே இறங்கும் படிகள். ஏகப்பட்ட பாசிடிவ் எனர்ஜி அங்கே உண்டு என்பது நிச்சயம்.

சித்ரா அவர்கள் எங்களை வாசல் வரை வந்து வரவேற்றதுமுதல் திரும்ப நாங்கள் கிளம்பும்போது கார் அருகே வந்து தன் கணவருடன் விடைகொடுக்கும் வரை அளவான பேச்சு.. ஆடம்பரம் மற்றும் ஆர்ப்பாட்டமில்லாத பணிவு..ஸ்வீட், மிக்சர், சமோசா, மசாலா தேநீர் என ஏக உபசரிப்பு எங்களுக்கு. ஏற்கனவே முன்பு Ananya Mahadevanனிடம் 'இன்னொரு டம்ளர் பாயசம் வேணுமா?' என பாசமாக கேட்டவர் என்பது எனக்குத்தெரியும்.
சித்ரா, என்னுடன் கூட வந்திருந்த என் சகோதரியின் ஜூனியராம் (Trichy SRC கல்லூரி). மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இவர்கள் இருவரும் ஜூனியர்ஸ் போன்ற உபரித்தகவல்களால் நாங்கள் கிளம்புவது இன்னும் அரை மணிநேரம் ஸ்வாரஸ்யமாக தள்ளிப்போனது.

கிளம்ப மனமேயில்லாமல் பேசிக்கொண்டிருந்தோம். எப்படியும் இரவு 12 மணிக்குள் திருச்சி போய்ச்சேரவேண்டுமென்பதால் அவர்களின் டின்னர் வேண்டுகோளை பணிவாக மறுத்து பாயசத்தை மிஸ் செய்தோம்.

குடும்பத்துடன் அவசியம் பஹ்ரைன் வந்து எங்ககளுடன் தங்கவேணுமாய் கேட்டுக்கொள்கிறேன் கே.கே.சார்..


No comments:

Post a Comment