Wednesday, August 13, 2014

அம்மா விட்டுச்சென்ற பொக்கிஷம்

போன வருடம் அம்மா விட்டுச்சென்ற பொக்கிஷங்களில் ஒன்று இது (சிவசங்கரி தொடர்கதை)...
பழைய விகடன், குமுதம் கதைப்பக்கங்களை வாராவாரம் கிழித்து 31 வாரங்களில் தொடர்கதை முடிந்ததும் கோனி ஊசி, ட்வைன் நூலால் தைத்து வைத்திருக்கிறார்கள்.

பழைய அட்டைப்பெட்டியில் 50 வருடங்களுக்கு முன் வெளிவந்த சில புத்தகங்கள் கிடைத்தன. நிறைய கதைகளைக்காணோம். பழைய ராணிமுத்து, தினமணிக்கதிர், ராணி, கல்கண்டு ஒன்றையும் காணோம்.
'ஜலதீபம்', 'தேன் சிந்துதே வானம்', 'எதற்காக' 'ரத்த
ம் ஒரே நிறம்', 'கரையெல்லாம் செண்பகப்பூ 'கதைகளை கிழித்து வைத்திருந்தார்கள்.எங்கே போனது?

நினைவிருக்கிறதா?...
38ஆம் பக்க மூலை, ஆறு வித்தியாசங்கள், மல்யுத்த வீரர் மல்லப்பா, கவுன்சிலர் கனகசபை, அப்புசாமி-சீதாப்பாட்டி-பீமாராவ்-ரசகுண்டு, இரட்டை வால் இரண்டு, மதனின் ரெட்டைவால் ரெங்குடு, வாணி ஜோக்ஸ், மணியன் பயனக்கட்டுரை, பரனீதரன் கட்டுரை, துப்பறியும் குவாக் சுந்தரம், கருத்துப்படம் (கக்கன் மரணம்-தானு கார்ட்டூன்), குரங்கு குசலா, அன்புள்ள அல்லி, பாட்டி வைத்தியம், சமைத்துப்பார், அழகாபுரி அழகப்பன், கான்ஸ்டபிள் கந்தசாமி(ஏ.கே.பட்டுசாமி).,...
இன்னும் சில வருஷங்கள் முன் ஶ்ரீதர் கார்ட்டூன்கள், மெரினா கதைகள், மோகமுள், பர்மா ரமணி, தேவன் கதைகள், நைலான் கயிறு, SS66, இன்னொரு செறுப்பு எங்கே, சங்கர்லால் துப்பறிகிறார், இட்ஸ்பெக்டர் வகாப், பேயாழ்வார், சாவி, வாஷிங்டனில் திருமணம், அருணாசல மகிமை, அகிலன், கொத்தமங்கலம் சுப்பு கதைகள்(தி.மோ), ஆதிமூலம், மருதி, லதா,வர்ணம், மாயா, ஜி.கே.மூர்த்தி, ஸிம்ஹா, வினு, கோபுலு ஓவியங்கள்...

மேலும் எதாவது நினைவுக்கு வருகிறதா?

No comments:

Post a Comment