Wednesday, August 13, 2014

கோச்சடையான்....


கோட்டைப்பட்டினம் ராஜா ரிஷிகோடனின் (நாசர்) படைத்தளபதி தான் அப்பா ரஜினி, கோச்சடையான். நிறைய சண்டை போடுகிறார். எதிரி மன்னன் மகேந்திரன் (ஜாக்கி ஷ்ராஃப்) நாடான கலிங்கபுரி படைகளுடன் போர். வீரர்களையும் குதிரைகள் மற்றும் ராணுவத்தளவாடங்களையும் இழந்து நாடு திரும்புகிறார். அதனால் போர்க்குற்றம் சுமத்தப்பட்டு மன்னன் நாசரால் கொல்லப்படுகிறார். 

பிறகு மகன் ரஜினி (ராணா) தந்தையைக்கொன்ற நாசரை பழிவாங்கும் எண்ணத்துடன் தந்தையால் இழந்த படை வீர்ர்களை மீட்க கலிங்கபுரி போகிறார். அங்கும் சிறந்த வீரனாகிறார். மன்னர் ஜாக்கிக்கு ரஜினியின் புகழ் தெரிய வருகிறது. மன்னரின் மகன் வீர மகேந்திரன்(ஆதி.... ஓ.. நீயும் நடிக்கறயா?). ஜாக்கியின் நன்மதிப்பைப்பெற்று அந்நாட்டின் படைத்தளபதியாகி திரும்ப கோட்டைப்பட்டினம் மீதே படை எடுக்க சம்மதம் பெறுகிறார் ரஜினி. சிறைபட்டிருந்த (கோ.பட்டினத்தைச்சேர்ந்த) வீரர்களையே போருக்கு அனுப்பலாம் என அவர் கொடுக்கும் ஐடியாவையும் ஏற்றுக்கொண்டு மன்மோகன்சிங் மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டுகிறார் அனிமேஷனில் ஜாக்கி ஷ்ராஃப் சாயலில்(!) இருக்கும் ஜாக்கி ஷ்ராஃப்..

போர் ஆரம்பம். போர் நாடுகளின் எல்லைக்கு வந்தவுடன் மகன் ரஜினி ராணா தன் வீரர்களிடம் 'நீங்கள் உங்கள் பழைய நாடான கோ.பட்டினத்துக்கே ஓடி விடுங்கள்' என அவர்களை விடுவித்தவுடன்தான் ஜாக்கிக்கும் அவரது மகன் வீர மகேந்திரனுக்கும் ரஜினியின் சூழ்ச்சி புரிகிறது. ('நமக்கும் தான்'னு சொல்லியிருந்தேன்னா அடி விழும்). படம் முழுக்க போர்..போர்..போர்..(மன்னிக்க.. bore... bore..bore)

ரஜினியும் தன் தாய் நாடான கோ.பட்டினத்துக்கே திரும்ப வந்து நாசரைக்கொல்ல முயன்று, நாசரால் சிறை பிடிக்கப்பட்டு, இளவரசி வதனா..அதாவது ரஜினியின் காதலியான தீப்பிக்கா(ரி) ரஜினியை விடுவிக்க முயல, பிக்காரியின் அண்ணன் செங்கோடனை (சரத்குமார்) ரஜினியின் தங்கை மணக்க...'ராஜ குடும்பத்தில் பிறந்து சாதாரண பெண்ணை மணந்ததால் உனக்கு அரியனை இல்லை' என நாசர் சொல்ல... அதனால் சரத் நாட்டை விட்டு வெளியேற....ஆஆஆவ்....பக்கத்தில் 'நாச்சோ' கொறித்துக்கொண்டிருந்த நண்பன் Anantha Narayanan க்கும் கொட்டாவி...

எங்க விட்டேன்?... ஆங்.. சொல்ல மறந்துட்டேனே! சின்ன வயசுலயே தொலைந்து போய்ட்டாராம் ரஜினியின் அண்ணன் சேணா... ( ஐயோ.. வேணா) அவரும் கடைசி சீன்ல வர்றாரு..அண்ணனும் தம்பியும் சேர்ந்து பழி வாங்கப்போறாங்க.... தொடரும்...னு ஸ்க்ரீன்ல போட்டவுடனே தியேட்டர்ல லைட் பளிச்சுன்னு எறிஞ்சுது.

'அப்பாடா..சரி.. உச்சா போய்ட்டு வந்து இன்டர்வல்லுக்கப்பறம் மீதி கருமத்த பாத்துத்தொலைக்கலாம்னா, 'ஹலோ..படமே முடிஞ்சிடுச்சு'ன்னு சொல்லி வயத்துல பால வர்த்தாங்க மக்கழே...ஆஆவ்..

'எதிரிகளை ஒழிக்க நெறைய வழி இருக்கு.. அதுல முக்கியமானது..மன்னிப்பு' போன்ற பஞ்ச் வசனங்கள்.

சோழிங்கநல்லூர் வழியா சுறுக்க சிறுசேரி போய்ட்டு சாயரச்சே திரும்ப வர்ற மாதிரி ரஜினி அடிக்கடி கோட்டைப்பட்டினம், கலிங்கபுரி கப்பல்ல போய்ட்டு போய்ட்டு வர்றார்.

படைவீரர்களுடன் நடுக்கடலில் திரும்பிக்கொண்டிருக்கும்போது எதிரிகளால் விஷம் கொடுக்கப்பட்டு தன் வீரர்கள் இன்னும் சில நிமிடங்களில்(?) இறந்துவிடுவார்கள் என மருத்துவர் ரஜினிடம் சொல்ல, அவர் ' பக்கத்துல எதாவது நிலம் இருக்கா? ஓ.. கலிங்கபுரியா? உடனே ரூட்ட மாத்து...' என இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு போற மாதிரி கப்பலை திருப்பும்போது....தூக்கம் கண்ணை சொறுகிடுச்சு...T.ஷர்ட்டெல்லாம் எச்சி...

தியேட்டரில் இருந்த குட்டீஸ் பாவம்...எல்லோர் கையிலும் ஊதுவதற்கு விசில் இருந்தும் தாங்கள் எதிர்பார்த்து வந்த ரஜினி இல்லாத்தால் Usharani Sridhar பக்கத்தில் உட்கார்ந்திருந்த Jayasri Narayanan குழந்தைகள் பரிதாபமாக படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"நானும் இருக்கேனே!".. யாருங்க அது? ஓ... தீபிகா படுகோனே.."அது சரி.. எனக்கென்ன வேலை? இது போர் சம்மந்தப்பட்ட படம் தானே! அப்பப்ப பாடல் காட்சியிலாவது 'புறமுதுகு'(ம்) காட்றேனே!" என்ற அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள் போலும். அனிமேஷனில் தீபிகா முகத்தை இன்னும் 2 முறை பார்த்தால் போதும். ரசிகர்கள் அவருக்கு சினிமா உலகிலிருந்து ஓய்வு கொடுத்துவிடுவார்கள். இந்த அனிமேஷன் ஐடியா தமிழ் சினிமாவுக்கும் வந்தால் கூடிய சீக்கிரம் சில நடிகைகளிடமிருந்து ரசிகர்களுக்கு விடிவுகாலம் கிட்டும்.

அனிமேஷன் முக, உதடு அசைவுகளுக்கு ஒத்து வராத ஒலி..குரல்... 70, 80 களில் தியேட்டர்களில் main படத்துக்கு முன் Indian news reviewவில் வரும் 'பீகாரில் வெள்ளம்'...மற்றும் விளம்பரப்படங்களான "தாதாஜி! பாட்மின்டன்"...ஞாபகம் வருகிறது.

பஹ்ரைனில் 400க்கும் மேல் டிக்கட்டுகளை முன்பதிவு செய்த நம் நண்பர்கள் Shyam Krishnan...மற்றும் அமீத் ஷா மாதிரி அவருக்கு உதவிய Karthik Gangaprakash பாராட்டுக்குறியவர்கள். படம் பார்க்கப்போன பெரியோர் சிறியோர் என எல்லோருக்கும் ரஜினி படம் போட்ட T.ஷர்ட்டுகள்...

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே (3D கூட இல்ல) படத்தைப்பார்க்கப்போன நாம் " இது technology' க்காகவே பார்க்க வேண்டிய படம் என குழந்தைகளிடம் எப்படிச்சொல்வது?

No comments:

Post a Comment