Saturday, February 2, 2013

ஏம்ப்பா! நீதான் நல்லா படம் எடுப்பியே! சும்மா ஜாலியா தெனாலி, பஞ்சதந்திரம், மைகேல் மதனகாமராஜன்..ன்னுட்டு எல்லாரையும் காமெடியால சிரிக்க வெச்சுட்டு, நல்ல டூயட் சீன் காமிச்சிகிட்டு, உனக்கு புடிச்ச (மத்த ஹீரோவெல்லாம் தயங்குவாங்க) 'முத்த காட்சி அது இதுன்னு உன் ரசிகர்களுக்கு வேண்டியது நெறையா இருக்கேப்பா!
நீ நல்லவனாச்செப்பா! அத வுட்டுப்புட்டு என்னாத்துக்கு இந்த வம்புதும்புக்கு போறே?
ஜாதி, மதம் பத்தி நீ வாய தொரந்தாவே ஒன்னுகெடக்க ஒன்ன சொல்லி நல்லா வாங்கி கட்டியும் இன்னம் புத்தி வரலையா?
புதுசா ஊரவுட்டு வேற ஓடிப்போவேன்னு பூச்சி காட்டறே!
தம்பி வேணாம்ப்பா! மகாநதி மாதிரி மெசேஜ் சொல்லு போதும்... வயசு வேற ஏறிகிட்டே போகுது... முணுக்குன்னு கோபம் வேற வந்துருது..
உன்ன எல்லாரும் திட்டுனா மனசுக்கு கஷ்டமாக்கீதுபா..
அவனப்பாரு (ரஜினி).... அவனும் உன்னமாதிரி தான் ரசிகர்களுக்கு தேவையானமாதிரி படம் எடுத்து,சின்னபொண்னுங்களோட டான்ஸ் ஆடறான்..நல்ல மெசேஜ் சொல்லி காசும் பண்றான்.சும்மா அரசியல், இமயமல அது இதுன்னு சொல்லி அங்க இங்க போயி,கப்புன்னு கொயட்டாயி, தானுண்டு தன வேலையுண்டுன்னு இருக்கான். 
போரும்பா... எங்கயும் ஓடிப்போகாம உள்ளூர்லேயே இரு..மத்தவங்க மனசுக்கு புண்படற சீன எடுத்துட்டு, சாமி, சிலுவை,ஜாதி பத்தி வாய் தறக்காம ஒடம்ப பாத்துகிட்டு ஆஸ்கர் வாங்கற வேலையப்பாரு.... சும்மா வம்ப வெலைக்கி வாங்கிகிட்டு....திருந்துப்பா..

Thursday, January 31, 2013

சினிமா தியேட்டர்


எல்லா அம்மாக்களும் இப்படித்தான் சினிமாவுக்கு கூட்டிப்போகாமல் படுத்தியிருக்கிறார்களா......
பாதி நாட்கள் நானும் என் தம்பியும் தென்னூர் பாப்பு செட்டி தெருவில் ஆரம்பித்து அம்மா மற்றும் சித்தி பின்னாலேயே(சினிமாவுக்கு கூட்டிப்போக ) கெஞ்சிக்கொண்டே போவோம். தென்னூர் வண்டி ஸ்டாண்டு,அக்ரஹாரம், ஹிந்தி ப்ரசாரசபா,ரயில்வே கிராஸ் வழியாக போய் ராமகிருஷ்ணா தியேட்டர் அல்லது ஜுபிடர் அல்லது பேலஸ் தியேட்டர் போய் டிக்கெட் வாங்கி இரக்கமே இல்லாமல் எங்களை விட்டு விட்டு பல்லாண்டு வாழ்க,மீனவ நண்பன்,உழைக்கும் கரங்கள் போன்ற திராவ படங்களுக்கு அவர்கள் போனதும் நாங்கள் வந்த வழியே திரும்பும் போது கோவிந்தராஜ் கல்யாண மண்டபத்தில் நடக்கும் ஏதோ ஆர்க்கெஸ்ட்ரா பார்த்து விட்டு அமிருதீன் ஆஸ்பிடல் அருகே உள்ள மைதானத்திர்க்கு போவோம்.பெரிய கூட்டத்திற்கு நடுவே ஒருவன் தரையில் படித்திருப்பான்(வாயில் நுரை) இன்னொருவன் 'அய்யாமாருங்க..அப்பாமாருங்க...இந்த ஒடம்பு இப்போ 4 அடி மேலே போகும்...எல்லாம் இந்த வாய்க்கு ..வயித்துக்குத்தான்' என்று சொல்வான். அது எதற்கு இருந்தாலும் சரியென்று நாங்களும (1 மணி நேரத்திற்கு மேல்) அவன் கீழே படுத்திருப்பவன் மேல் துணிகளை போட்டு மூடி கையை உயர்த்தினால் அந்த உடல் 3 அடிக்கு (மெய்யாலுமே) உயர்ந்ததை பார்த்து விட்டு தான் கிளம்புவோம்.(பாதியில் எழுந்து போனால் பேதியில் போகுமென்று வேறு பயமுறுத்தியிருக்கிறான்)
ஒருவழியாக இதெல்லாம் முடிந்து இருட்டும் நேரம் வீடு திரும்பினால் வாசலில் அம்மா(மீனவ நண்பன் முடிந்து). அப்புறமென்ன... 'பளார்' தான்

தியேட்டரில் படம் பார்க்கும் போதே என்ன பதார்த்தங்கள் சாப்பிடலாம் என்ற கட்டுப்பாடு எங்கள் வீட்டில் இருந்ததுண்டு. அதாவது கடலை மிட்டாய் SAFE என்று அவர்கள் நினைக்க, நாங்கள் பீடா (கலர் தேங்காய் தூள் தூவியது) வாங்கினால், 'காசுனி வேஸ்ட் சேஸ்திவேரா ' என்று சொல்லி நடு தொடையில் கன்னிப்போகும் அளவிற்கு ஒரு non stop கிள்ளு. அதை நிறுத்த ஒரே வழி எனக்கும் என் தம்பிக்கும் தெரியும். அந்த பட இண்டர்வல்லில் (வலி இல்லையென்றாலும்) 'லேது..லேது .. ஒத்து...' என்று காட்டுக்கத்தல் போடுவோம்.எல்லோரும் பார்க்கிறார்கள் என்று வெட்கப்பட்டு அம்மா (நுவ்வு இன்டிக்கி ரா.. என்று சன்னமாக மிரட்டி) விட்டுவிடுவார்கள்.
முக்கோண காய்கறி சமோசா, 8 track முறுக்கு,முட்டைகோசு வடை(பிளாசா தியேட்டரில் மட்டும்),டிர்ரிங்க் என்று சாவியால் ஒலிஎழுப்பியபடி காளி மார்க் கலர் , இதெல்லாமல் சாப்பிடாமல் தமிழ் படமா?( அப்போது எங்களுக்கு MGR ராதா சலூஜாவை கல்யாணம் செய்தால் என்ன,செய்யாட்டி என்ன