Sunday, July 19, 2026

Dr.Sundaram Murugusundaram

 தமிழகத்தில் சிறந்த தோல் மருத்துவர் இவர். எனது முகநூல் நண்பர். அதீத நகைச்சுவை உணர்வு கொண்டவர். இலக்கிய ரசனை கொண்ட தமிழ் ஆர்வலர். காரைக்குடி செட்டிநாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.

சென்னை ஸ்கின் ஃபௌண்டேஷனின் சுகாதார இயக்குநர் மற்றும் சென்னை ஸ்கின் ஹேர் க்ளினக்கின் மூத்த தோல் மருத்துவரான இவரது podcast மற்றும் டிவி கலந்தாய்வு நிகழ்ச்சிகளில் தோல் சம்மந்தப்பட்ட நோய்கள்
முடி உதிர்தல், கேச பராமரிப்பு பற்றி ஏராளமான விளக்கங்களை நகைச்சுவை கலந்து சுவாரசியமாக கொடுப்பார். வெறும் மருந்து சாப்பிட்டு தலைமுடி உதிர்தலை சரியாக்கிக்கொள்ள நினைத்து வரும் மக்களுக்கு இவர் சொல்வது, மருந்து மட்டும் பயன் தராது, நல்ல போஷாக்கான உணவு உண்பதும் அவசியம் என்கிறார் இவர்.
‘இந்த வெந்தயம் அறைச்சு தலைல பூசிக்கிறாங்களே, அப்பறம் ஹேர்மாஸ்க் போட்டுக்கறது, அரிசி மாவு தேய்ச்சுக்கறது இதெல்லாம் பயன் தருமா?’ என கேட்டால் இவர் சொல்வது: ‘அரிசி மாவெல்லாம் அறைக்க நேரம் இருக்கா உங்களுக்கு! வெந்தயத்த சாப்பாட்டோட சேத்திக்கிட்டா அதோட பலன்கள் தானாவே தலைக்கு போகும், அதை விட்டுட்டு தலைக்கு தேய்ச்சு என்ன பிரயோசனம்? தலைக்கு என்ன வாயா இருக்கு?’
முடி கொட்டுவதே நம் உடம்பிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களின் அறிகுறி தானாம். அதாவது இரும்பு, கால்ஷியம், விட்டமின் போன்றவைகளின் பற்றாக்குறையை குறிப்பதாகும். அதற்கென உணவு வகைகளை உட்கொண்டால் போதும், முடி உதிர்தலை தடுக்கலாமாம்.
தினமும் தலை முடியை நீரில் அலசி அழுக்கில்லாமல் சுத்தமாக பராமரிப்பது, நல்ல சத்துள்ள உணவு வகைகளை உண்பது, மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வது, இந்த மூன்றையும் செய்யச்சொல்கிறார்.
போதிய அளவு தூக்கம், உடற்பயிற்சி, கவலையின்மை, மனதிற்கு பிடித்ததை செய்தல், மன அழுத்தமில்லாமல் இருத்தல் போன்றவற்றை செய்வது நம்மையே நாம் அக்கரையுடன் கவனித்துக்கொள்ளும் Self Love என்பதாகும் என்கிறார். இதற்குப்பின்பு தான் காதலி, கடலை போடுவதெல்லாம் வைத்துக்கொள்ளலாம் என்கிறார்.
அவ்வப்போது எனது பதிவுகளுக்கும் வந்து கமென்ட் கொடுப்பார் டாக்டர்.
இவரது தலைமுடியை பார்க்க நமக்கு ரொம்ப பொறாமை. இவரது முகநூல் பக்கம் போய் சில வீடியோக்களை பாருங்கள். நகைச்சுவையுடன் இவர் தரும் ஆலோசனைகள் ஏராளம். (சாம்பிளுக்கு ஒன்று முதல் கமென்ட்டில்)

All Rise

 2001, 2002 வாக்கில் இருக்கும்.. பஹ்ரைன் போய் ஏழெட்டு வருஷங்கள் ஆச்சு அப்ப. ஹூரா மற்றும் குதேபியா பகுதிகளில் குடியிருந்தோம். வீட்டை விட்டு வெளிய வந்தால் பர்கர் பீட்சா கடைகள், அரபி காபி ஷாப்கள், பொட்டிக்கடைகள் மற்றும் பொட்டீக் (Boutique )கடைகள், சிறிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள், கோல்ட் ஸ்டோர் எனப்படும் சிறுமளிகைக்கடைகள் பரவலாக எல்லா ரோடுகளிலும் இருக்கும்.

மாலை ஆறிலிருந்து விடிய விடிய பளீரென விளக்கொளி பாய்ச்சும் கடை வீதிகள். அண்டை நாடுகளிலிருந்து சில மணி நேரங்களில் பஹ்ரைன் எல்லை கடந்து மெதுவாக சாலையில் ஊர்ந்து செல்லும் குவெயித்தி, சவுதி, கத்தார் கார்களில் தண்ணியடிக்கும் வேட்கையில் இளைஞர்கள், இளம் எத்தியோப்பிய, ஃபிலிப்பினோ பெண்கள், ஏராளமான இந்தியர்கள்… ஊரே பிரகாசமாக இருக்க, மெக்டொனால்ட்ஸ், பீட்சா ஹட், டெய்ரி க்வீன் போன்ற கடைகளில் மிதமான கூட்டத்தில் சோம்பேறித்தனமாகவும் அதே சமயம் ரொம்ப ரிலாக்ஸ்டாக மக்கள் குழந்தைகளுடன் சோளமாவு தூவிப்பொறித்த கோழிகளை பெப்ஸியுடன் சுவைத்து கடித்துண்டு களிக்க, மேலே உத்திரத்தில் ‘ஆல் ரைஸ்’ எனும் பாப் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்.
பதிவே இந்த பாடல் பற்றியது. அந்த சின்ன வயதிலேயே பெரியவன் (9) மற்றும் சின்னவன் (3) இருவரும் அந்த பாடலை ரசித்து தலையாட்டிக்கொண்டிருக்க, நாள் முழுக்க பஹ்ரைன் ரேடியோ எஃப்எம்மில் அந்த பாடல் ஒரு நாளைக்கு நாலைந்து முறை ஒலிக்கும். பள்ளி ஆண்டுவிழாவில் பையன்கள் பாடும் பாட்டு, ஜிம்களில் ட்ரெட்மில்லில் நடந்துகொண்டே அந்த பாடலை ரசிக்கும் அரபி/இந்திய இளைஞர்கள், நடுக்கடலில் மீன் பிடிக்க உல்லாசப்படகில் வியாழன் மாலை கிளம்பி சனியன்று வீடு திரும்பும் துரை மற்றும் துரைசானிகள் விரும்பி கேட்கும் பாடல், ஏர்போர்ட் லவுஞ்ச், டியூட்டிஃப்ரீ என சகல இடங்களிலும் ஒலித்த அந்த பாடல்!
Boy band எனப்படும் இங்கிலாந்தின் பதின்ம வயது டீன்ஏஜ் இளசுகளின் ‘ப்ளூ’ எனும் ஆல்பத்தின்

All Rise எனும் முதல் பாடல் அது. இங்கிலாந்தின் டாப் 75 ஆல்ப வரிசையில் பல வாரங்கள் டேரா போட்டு கிடந்தது இந்த ஆல்பம். ரயான், கோஸ்டா, ஜேம்ஸ் மற்றும் சைமன் என்ற நால்வரணி கொண்ட குழு பாடிய பாடல் பட்டையை கிளப்பியது. பாடலின் வெற்றிக்கு மற்றுமொரு காரணம் பாடல் வரிகள். குறிப்பாக ஐந்து முறை வரும் அந்த அனுபல்லவி.
என்ன விசேஷம் பாடல் வரியிலும் அனுபல்லவியிலும்?
காதல் தோல்வி அல்லது வெற்றி பெறாத காதலுடன் இளைஞன் ஒருவன் காதலியை கோர்ட்டுக்கு இழுத்து, நீதிபதி முன் ஆஜராகி ‘யுவர் ஆனர்’ என ஆரம்பித்து, காதலியை சாடிப்பாடுகிறானாம். ‘அடியே கள்ளி! நீ பண்ணாத அழிச்சாட்டியம் கொஞ்சமா நஞ்சமா! ஒண்ணு, எவ்ளோ தடவ ஜட்டி தெரியற மாரி குட்டைப்பாவாடை பறக்க எங்கூட ஓசி பைக்ல சுத்தியிருக்க! பட்டானி கடலை கொறிச்சிருக்க!’ ரெண்டு, எவ்ளோ கத அளந்து கப்சா வுட்ருக்க, இப்ப இல்லங்ற! மூணு, எவ்ளோ தபா போன் செஞ்சி கடல போட்ருக்க, நாலு, எவ்ளோ நடிச்சி என்னய ஏமாத்தியிருக்க! அவ்ளோ தான் சொல்லுவேன்! என சரமாரியாக விரல் விட்டுச் சொல்லி தன் தரப்பு வாத த்துடன் அங்கலாய்க்கிறான். அந்த அனுபல்லவி வரியில் (கீழே) அப்பிடி தான் இருக்கா என ஆராய வேண்டாம்).
One… for the money and the free rides
It's two… for the lie that you denied
Three… for the calls you've been making
It's four.. all the times you've been faking
All rise, I'm gonna tell it to your face
All rise, I rest my case (uh-huh)
இந்த பேண்டு தங்களது 25ஆவது ஆண்டு விழாவை கொண்டாட உலகம் முழுவதும் சுற்றி கடைசியாக இந்தியா (டிசம்பர் 14) வருகிறார்களாம். இன்று காலை செய்தி பார்த்ததும் மனம் சட்டென 25 வருடங்கள் பின் நோக்கிப்போக, உடனே ஏழெட்டு முறை இந்த பாடலை மாறி மாறி யூட்யூபில் போட்டு பார்த்ததன் விளைவே இந்த பதிவு!
பி.கு1 : பாடல் முதல் கமென்ட்டில்.
பி.கு2: அடுத்த சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சம் இதே மெட்டில் ‘ஜூன் போனால் ஜூலைக்காற்றே’ வந்து அதுவும் அட்டகாசமாக இருந்தது.
பி.கு3: பாடலை கேட்டதும் முழு பாடல் வரிகளையும் டௌன்லோடு செய்துபடியுங்கள், பாடலை இன்னும் ரசிப்பீர்கள்.

குருசி

 சுமார் 10 வருடங்களுக்கு முன் எனக்கு சென்னையில் அறிமுகமானவர் இவர். பார்த்த மாத்திரத்தில் இவரிடம் ஒளிந்துகொண்டிருக்கும் இவ்வளவு திறமைகளா என கண்டுபிடிக்கவே முடியாது. மன்மோகன்சிங், மணிரத்னம் போன்றவர்களுக்கே க்ளாஸ் எடுக்கும் அளவிற்கு Man of few words என சொல்லலாம்.

கோவையில் CIT பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயன்ஸ் பட்டப்படிப்பும் ஜாம்ஷெட்பூர் XLRIயில் முதுநிலை படிப்பும் முடித்து, Wipro போன்ற பெருநிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றில் திறம்பட செயல்புரிகிறார். அதுகுறித்த நிறைய பதிவுகளும் இடுகிறார்.
Man of few words என்று சொன்னேனல்லவா! ஆனால் நகைச்சுவை பிரவாகம் எடுக்கும் இவரது எழுத்துக்களில். சில வருடங்களுக்கு முன்பு சென்னை அடைமழைக்குப்பிறகு ‘மழை நின்னுப்போச்சு! தாய்மார்களே இனி நீங்கள் வடாம் பிழிய மொட்டைமாடிக்கு போகலாம்’ என முகநூலில் அறிவித்தவர்.
இவரது பதிவுகள் பிரமிப்பூட்டுபவை. ஆங்கிலப்புலமையை மேலும் வளர்த்துக்கொள்ள தரூர் போன்றவர்கள் இவரது வீட்டு வாசலில் காத்துக்கிடக்கிறார்களாம். 😁
சென்னையில் நிகழும் இசை நிகழ்ச்சிகள் எதிலும் முதன்மையாக கலந்துகொள்பவர். அதுபற்றி சுவாரசியமாகவும் எழுதி புகைப்படங்களுடன் பதிவிடுபவர்.
ஆண்டவன் இவரை படைக்கும்போது மண்டை நிறைய மூளையை அடைத்த பின், கையில் மிச்சமிருந்த மூளையை வேஸ்ட் பண்ண விரும்பாமல் அப்படியே இவரது மண்டைக்குள் இன்னும் கொஞ்சம் திணித்து அனுப்பி விட்டார் போலும்.

குருசி என அன்புடன் நண்பர்களால் விளிக்கப்படுபவர்.
10 வருடங்களில் சற்றும் மாறாத அதே இளமை இப்போதும் இவரிடம்.

லேபக்‌ஷி (ஆந்திரா) ஒரு நாள் ட்ரிப்..

லேபக்‌ஷி (ஆந்திரா) ஒரு நாள் ட்ரிப்..

சீதையைத்தேடிச் செல்லும் வழியில் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஜடாயுவை பார்த்து ராமன், ‘லே பக்‌ஷி!’ (தெலுங்கில் லே=எழுந்திரு) எனக்கேட்க அந்த இடத்திற்கு லேபக்‌ஷி என்ற பெயர்.
காலை 7 மணிக்கு வண்டியை கிளப்பி, ஷட்டகர் குடும்பத்தை பிக்கப் செய்துகொண்டு, பெங்களூர் ஏர்போர்ட் சுங்கச்சாவடி தாண்டியதும் லைட் டிபன் காபியை முடித்துக்கொண்டு ஆக்ஸிலேட்டரை அழுத்தினால், சிக்கபல்லாப்பூர் தாண்டி ஒரு மணி நேரத்தில் ஆந்திரா பார்டரில் லேபக்‌ஷி (ஶ்ரீசத்யசாய் மாவட்டம்) வந்துவிடும்.
முழுக்க பாறைகளின் மேல் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய பழம்பெரும் வீரபத்ரர் கோவில். கோவில் பிரகாரத்தையடுத்து , சிவன் பார்வதி திருமணத்திற்காக கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட மண்டபம். ராமர் பாதம் பார்க்க வந்த வட இந்தியர்கள் கூட்டமே இல்லையென்றாலும் எல்லோரையும் தள்ளிக்கொண்டு பார்த்தார்கள். துர்கா தேவிக்கென தனி சன்னதி இல்லாமல் பிரகாரத்தின் ஒரு மூலையில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து, அவளது உக்கிரமான கண்களை நேராக பார்க்க பயமென்பதால் எதிரே பெரிய கண்ணாடி வைத்து, பக்கவாட்டில் நின்றபடி கண்ணாடி பார்த்து அம்மனை தரிசிக்கலாம். நாம் நினைத்து வேண்டிக்கொண்டதை நிறைவேற்றி வைக்கிறாள் சுட்டெறிக்கும் கண்களுடன்.
மண்டப தூண்களில் ஒன்று தரையில் பதியாமல் தொட்டும் தொடாமல் உள்ளது. அதெப்படி! கீழே இடைவெளியில் சேலை தலைப்பு அல்லது துப்பட்டாவை மக்கள் இந்தப்பக்கம் விட்டு இழுத்து அந்தப்பக்கம் எடுப்பதை சென்றமுறை பார்த்து வியந்த நான், இந்த முறை முயன்று அது முடியவில்லை. விஷமக்காரன் எவனோ நாணயத்தை உள்ளே தள்ளிவிட்டிருக்கிறான். (வீடியோ பார்க்க)
பிரம்மாண்டமான நாகலிங்க பிள்ளையாரை பாறையில் வடித்திருக்கிறார்கள். இரண்டாள் உயரம் இருக்கும். கோவிலை விட்டு வெளியே வரும்போது ‘அன்னதானம் அக்கடே உந்தி.. ரெண்டி!’ என வாலண்டியர்கள் பக்தர்களை அழைக்கிறார்கள். குளிராக இருந்தாலும் இளநீர் விற்பனை அமோகம் அங்கே. ‘நீளு, கெஞ்சி காவலி’ என்றதும் நல்ல பச்சையான இளநீரை வெட்டிக்கொடுத்தார் அந்தப்பெண்மணி. நல்ல இனிப்பு இளநீர் மற்றும் தேங்காய். (கெஞ்சி=இளநீர் கஞ்சி)
பெரிய ஜடாயுவின் சிலை மலைக்கு மேல் வைக்கப்பட்டு மக்கள் படியில் ஏறி மேலே போக, நாங்கள் கீழிருந்தே பார்த்தோம். பிரம்மாண்டமான ந்ந்தி சிலை கொண்ட பூங்க பிரமிக்க வைத்தது.
‘பொருகுலு’ (பொறி) வைத்திருந்த பெண் கையில் பிளாஸ்டிக் க்ளவுஸ் அணிந்துகொண்டு பெரிய எவர்சில்வர் ஏனத்தில் நாலைந்து கைகள் பொறியை அள்ளிப்போட்டு, கார சட்னி, வெங்காயம், கடலை, காராச்சேவு, மாங்காய், வெள்ளரி அரிந்து போட்டு மசாலா பொடி தூவி பொட்டலத்தில் கொடுத்தார். 40 ரூபாய்க்கு செம்ம டேஸ்ட். அப்படியே கையில் எடுத்து சாப்பிட வேண்டும் என்றவரிடம் ‘ திக்கான பேப்பரை சதுரமாக கட் பண்ணி அதையே ஸ்பூன் போல கொடுக்கலாமே’ என்ற தமிழ்நாட்டு ஐடியாவை கொடுக்க, உடனே ஏற்றுக்கொண்டு ‘ஏ பில்லலா! அண்ணையா செப்பினட்டே பேப்பர்னி கட் செய்யண்டி!’ என மற்ற பெண்களை ஏவினார்.
அழகிய கிராமம். அரிசி மற்றும் எல்லா பருப்பு வகைகளையும் பயிர் செய்து ரோட்டோரத்திலேயே அரை கிலோ பொட்டலங்களாக கட்டி விற்கிறார்கள். கடுகு, வெந்தயம், பயறு, பாத்திரம், கத்தி, இரும்பு சாமான்கள் விற்பனை. சுகமாக கிராமத்து ஷாப்பிங் செய்தோம். அந்த எவர்சில்வர் பேசினை திருப்பி பேடிஎம்மில் ஸ்கேன் செய்யச்சொன்னார் கில்லாடி ரேவந்த் ரெட்டி.
மணி மதியம் இரண்டு.. நல்ல பசி. பெங்களூர் திரும்ப நாலு மணியாகி விடுமென்பதால் சாப்பாட்டுக்கடை தேடினோம். ‘இக்கடே ஓட்டல் எதினா உந்தா?’ எனக்கேட்க ‘நேருங்கா பொண்டி, ஒஸ்துந்தி’ என ஒருவர் கைகாட்ட, சாராயக்கடைகள் தாண்டி, அடுத்த பத்து நிமிடத்தில் கௌரிபிட்னூர் என்ற சிற்றூரில் விஷ்னு கிராண்ட் எனும் உணவகம். அவசரமாக இறங்கி ஓடினோம். பார்டர் என்பதால் கன்னடம்/தெலுங்கு பேசுகிறார்கள். பெங்களூரிலேயே தெலுங்கு மட்டும் பேசுகிற ஆளான நான் ஆந்திராவென்றால் கண்ட்டசாலா ஆகிவிடுவேன்.
தாலி சாப்பாட்டில் ராகி (முத்தே) களி உருண்டை, சப்பாத்தி மற்றும் இன்னபிற வஸ்துக்கள். எனக்கு பிடித்த ‘அன்னம்+பப்புகூற மாத்ரம் சிக்குதா?’ எனக்கேட்க அரிசியுடன் பருப்பு கீரை வைத்தான். தொட்டுக்க மதூர் வடா. அபார ருசி. இந்த மதூர் வடா என்பது நம்மூர் தட்டை போல. ரவையை ஊறவைத்து மாவாக பிசைந்து வெண்ணெய், வெங்காயம் மற்றும் ஓமம் எல்லாம் சேர்த்து தட்டையாக எண்ணெயில் பொறித்தெடுக்கிறார்கள். கொலஸ்ட்ரால் எகிறும். A to Z அல்ஃப்பெட் லிஸ்ட் போட்டு எல்லா எழுத்துகளுக்கும் ஒரு பண்டம் செய்கிறார்கள் (படம் பார்க்க!)
கௌரிபிடனூர் சாலை ஓரத்தில் நாட்டி (நாட்டு) காய்கறிகள் ஃப்ரெஷ்ஷாக விற்கிறார்கள். குறிப்பாக அவர்கள் விரும்பி சாப்பிடும் அவரைக்காய். தோலை உரித்து அவரை விதைகளை அரைத்து தோசையில், களியில் சேர்க்கிறார்கள். விதையின் தோலோடு சாப்பிட்டால் வாயுத்தொல்லை வராதாம். தோலை பிதுக்கி சமைத்தால் ஹைட்ரஜன் பாம் தானாம்.
அப்படியே வண்டியை திருப்பி அடுத்த 45 நிமிடத்தில் காட்டி (Ghati) சுப்பரமண்யா ஊருக்கு வந்தோம். நம் தூரத்து உறவினர் ஒருவர் கன்ட்ரி க்ளப்பின் CEOவாக இருந்தவர். அந்தப்பக்கம் நிலங்கள் வாங்கி ப்ளாட் போடுகிறார். சுமார் 25லட்ச செலவில் காட்டி சுப்ரமண்யா ஊர் வாயிலில் அவர் ஒரு ஆர்ச் கட்டிக்கொடுத்திருக்க, அதையும் போய் பார்த்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.
ஏழுதலை பாம்புடன் முருகன் மற்றும் ந்ரசிம்மர் சுயம்பு வடிவில் நாக தெய்வமாக கா(G)ட்டி சுப்ரமண்யா என்ற பெயரில். 50 ரூபாய்க்கு ஸ்பெஷல் டிக்கெட் பத்து நிமிடம் வரிசையில் நின்று தரிசனம் முடித்து கோவிலின் பின்பக்கம் வந்தால் சுமார் ஆயிரம் நாகதேவதைகள் கல்லில் செய்து வைத்திருக்கிறார்கள். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பணம் கட்டி நாகசிலை செய்து வைத்து அவர்கள் பெயரை பொறித்து வைக்கிறார்கள், நல்ல பலன் கிட்டுமாம்.
லேசாக இருட்டத்தொடங்க, வண்டியை கிளப்பி தொட்டபல்லாப்பூர் வழியே அடுத்த ஒரு மணி நேரத்தில் யேலஹங்க்கா, ஹெப்பால் தாண்டி ஏழு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.
பெங்களூரிலிருந்து ஒருநாள் டிரிப்புக்கு மைசூர், தும்கூர், ஆந்திரா, கோலார் பக்கம் போய்வர நிறைய இடங்கள் உள்ளன. ஏகப்பட்ட கோவில்கள் அன்னப்பிரசாதத்துடன். நல்ல ஓட்டல் சாப்பாடு கிடைப்பது அரிது. நம்மைப்போல மாலை நாலு மணிக்கு வாய் நமநமத்து பஜ்ஜி, பக்கோடா, டீ சாப்பிடும் ஆசையே இல்லாதவர்கள். ஆனால் தண்ணியடிக்கச்சொல்லுங்கள் போதும், நேரங்காலம் பார்க்காமல் பாட்டிலை திறப்பான்கள்.

90 வயதைத்தொடும் சுசிலாம்மா

 வா.. வா.. வா.. சுசிலாம்மா!

1965 இலிருந்து 70 காலக்கட்டத்தில் சுசிலாம்மாவின் குரலில் உள்ள இனிமை! அப்பப்பா! அப்ப அந்த வயதில் (30,35க்குள்) காட்சிகளுக்கேற்ப, காட்சியில் நடிக்கும் நடிகைகளுக்கேற்ப குரலை ஃபைன் ட்யூன் செய்வார். பிற்காலத்தில் 60 வயதை நெருங்கும்போது ‘முத்து மணி மால’ பாட்டில் கூட கொஞ்சம் ஸ்ரம்ப்பட்டு அதே இனிமையை கொண்டு வந்திருப்பார்.
“மனசிருக்கனும் மனசிருக்கனும் பச்சப்புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கனும் வெளித்திருக்கனும் மல்லியம்பூவாட்டம்”
டிஎம்எஸ் உச்ச ஸ்தாயியில் பல்லவியை ஆரம்பிக்க சுசிலாம்மா ‘அடி யா..யா.. யா.. யக்கூ’ என குலவை சத்தம் கொடுத்தபின்,
“புத்தியிருக்கனும் புத்தியிருக்கனும் கத்திமுனையாட்டம்
அத வச்சிப்பொழைக்கனும் வச்சிப்பொழைக்கனும் சொத்து சுகமாட்டம்” என அனுபல்லவியை தொடரும் சுசிலாம்மா, அபாரமான அந்த நாட்டுப்பாடலை கிராமத்துப்பாணியில் பாடி அசத்தியிருப்பார். அதிலும் ‘கத்திமுனையாட்டம்’இல் அந்த ‘டம்’இற்குப்பிறகு … ம்ம்…ம்ம்.. என நீண்ட ஆலாபனையில் ஒரு folk டச் கொடுப்பார் பாருங்கள்.
“அரண்மனை அறிவான் அரியணை அறிவான் அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்
வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான்
மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்”
பாடலில் (கர்ணன்) நல்ல முதிர்ந்த குரல், ஏக்கம், கொஞ்சம் விரகதாபம் எல்லாவற்றையும் கலந்து சாவித்திரிக்கு ஏற்றபடி பாடியிருப்பார் சுசிலா. அந்த இடத்தில் கீச்சுக்குரலில் ஜானகியை வைத்து கற்பனை செய்து பாருங்கள்! பொருந்தாது. ஜானகிக்கு வேறு ஜானர்.
கிராமத்து பாடல், இளம் காதல் பாட்டு ஆச்சா! அடுத்து அதே காலகட்டத்தில் (1965-70) வந்த இந்த பாடல் மத்திய வயதைக்கடந்த பாத்திரம் (வி.வீடு பத்மினி)…
பாலிருக்கும் பழமிருக்கும்
பள்ளி அறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்
சாந்தி என்றால் என்னவென்று
ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே
ராஜாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
நாற்பது வயது காதல், நாணம், சாந்தம், குறும்பு என எல்லா பாவங்களையும் பத்மினியை விட சுசிலா மேற்சொன்ன சரணத்தில் வெளிப்படுத்துவார்.
‘ஆனிப் பொன் மேனியை
ஆசையில் அணைத்திட
காணிக்கை கொடுத்ததும்
நேற்றல்லவோ
பனி மலர் அழகினில்
மயங்கிட அருகினில்
வந்தால் இன்றே வா...
கந்தர் சஷ்டி கவசம் போல சின்னச்சின்ன வரிகளை துரிதமாக பாடும் பாங்கு அபாரம். இந்த பாடல் இடம்பெறும் கலாட்டா கல்யாணத்தில் (மெல்ல வரும் காற்று) அந்த கடைசி ‘வா’ வை அப்படியே லேசான நடுக்கத்துடன் இழுப்பார். ஜெயலலிதாவின் காதலை சுசிலா அந்த ச்சில்லிங் ‘வா’ விலேயே வெளிப்படுத்துவார்.
“கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா”
இளம் பச்சை நிற சேலை மற்றும் ஸ்லீவ்லெஸ்ஸுடன் ஜெயலலிதா எம்ஜியாருடன், நகை ஆசாரி தங்கத்தை உரசுவது போல, உரசி உரசி பாடும் (ர.போலிஸ் 115) ‘கண்ணே கனியே முத்தே மணியே வா” பாடலில் சுசிலா தன் சன்னமான நேஸல் வாய்சில் கொஞ்சிப்பாடுவார். என்ன விசேஷம் அந்த ‘வா’ வில்! எம்ஜியார் ‘வா’ என முடிக்கும் முன்பே அவசரமாக டுட்டுடும் என போங்கோஸை அடிக்கும் எம்எஸ்வி, சுசிலாவை மட்டும் ‘வாஆஆஆஆ’ என இழுக்க வைப்பார்! மதுவை விட போதை தரும் நேர்த்தி!
“ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..”
ஆண்டவன் கட்டளை ‘அழகே வா அருகே வா’ பாடலில்..ஸ்கின்ஃபிட் சூட்டுடன் சிவாஜி விலகி விலகிப் போக, அருவி நீர்வீழ்ச்சியில் ஈரத்துணியுடன், கண்களில் காந்தம், லேசான காமம், விரகம், ஏக்கம், கெஞ்சலுடன்… யாரு தேவிகாவா கூப்பிடறாங்க? இல்லை இல்லை.. சுசிலாம்மா அழைக்கிறார் அந்த கடைசி வரி… வா..வா.. வா என! என்ன சக்தி அந்த ‘வா.. வா.. வா’ விற்கு!
“பெண் பாவம் உன்னைத் தொடர்ந்து வரும் - ஒருநிழல் போலே அது நடந்து வரும்..
கண்ணீரால் விதி எழுதி வைத்தும் - என்
கதை கேட்டால் கல்லும் கனிந்துருகும்..
கல்லும் கனிந்துருகும்..
வா அருகில் வா.. தா உயிரைத் தா..
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான்..
வாசலைத் தேடி வா.. வா.. வா.. “
மேலே குறிப்பட்ட பாடல் அதே கண்கள் படம்… பேய்ப்படங்களில் பெரும்பாலும் இரவுக்காட்சிகள் தான் ஆவியை பின் தொடர்ந்து போதல், புகை மண்டலம் என பயமுறுத்தும். துணிவே துணை, அதே கண்கள் படங்களில் உச்சிவேளை பன்னிரண்டு மணிக்கும் வெள்ளைப்புடவை, தலையில் கனகாம்பரம்.. சவுக்கு தோப்பில் நடந்து போகும் காஞ்சனாவி! ‘வா.. அருகில் வா.. தா உயிரைத் தா’ என ஈஈரி வாய்ஸில் சுசிலா பாடுவார். வேதாவின் இசை, பக்கவாத்தியங்களுடன் வாஆஆஆ என சுசிலா இழுக்க, பாடலை ரசிப்பதா, காட்சியை ரசிப்பதா என நமக்கு மட்டுமல்ல, அந்த காட்சியில் வரும் அசோகனுக்கும் ரவிச்சந்திரனுக்கும் தெரியாது!
இன்னும் நிறைய ‘வா.. வா.. வா‘ பாடல்கள்!
சுசிலாம்மா பற்றி எழுதனும்னா தினமும் அவருக்கு பிறந்தநாள் வரனும், இன்னும் 100 Ranganathan Ganeshகளும் Janarthanan KB களும் அவரைப்பற்றி எழுத வேணும்.

90 வயதைத்தொடும் சுசிலாம்மா அசால்ட்டாக இன்னும் பத்து வயதை கடக்க வேண்டி,
பென்சில் ஓவியத்துடன் வாழ்த்தும்,

JayRaghu Birthday

 பரபரப்புடன் டாக்டர் அவினாஷ் வந்தான்.

‘ஆவ்ரில்! பெரியவர் மூட் எப்பிடி இன்னிக்கி?’
‘டோன்ட் ஆஸ்க் மி. ஹி ஈஸ் க்ராங்க்கி டுடே?’
‘என்னாச்சு?’
‘இன்னாச்சுன்னு தெர்ல மேன். ஹி ஈஸ் ஜஸ்ட் யெல்லிங் அட் எவ்ரிவொன்’
‘சாப்டீங்களா?’
‘ஜீசஸ்! ஐ’ம் ஜஸ்ட் ஆன் மை ட்டோஸ் ஸின்ஸ் மார்னிங். துன்ன கூட நேரமில்ல’.
பெரியவர் உள்ளே இருந்து ஆவ்ரிலை கூப்பிடுகிறார்.
‘ஆவ்ரில்! அந்த குப்தா பொண்டாட்டிக்கு ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பண்ணியாச்சா?’
‘ஆல் டன் டாக்டர். ட்ரெட்மில் ஆச்சு. ஷி டைம்ட் 11 மினிட்ஸ். புஸ்ஸு புஸ்ஸுனு மூச்சு வாங்கிச்சு, நிறுத்திட்டேன்’
‘அதிருக்கட்டும்.. டார்கெட் ஹார்ட் ரேட்?’
‘85% பண்ணீருச்சு அந்த பொம்ள’
‘குட். டாப்ளர் எக்கோ?’
‘அல்லாம் ஆச்சு. நார்மல் ப்ளட் ஃப்ளோ, நார்மல் ஹார்ட் ஸ்ட்ரக்ச்சர் அன்ட் வால் மோஷன்.’
‘பெரிகார்டியல் எஃப்யூஷன்?’
‘பாத்தாச்சு, நோ விஸிபிள் க்ளாட், நோ எக்ஸெஸ் ஃப்ளூயிட் பில்ட் அப்’
‘க்ரேட். அந்த ப்ளகாட் அவினாஷ் அடுத்த வாரம் லீவுல போனாலும் நீ நல்லா மேனேஜ் பண்ணுவே’
‘தேங்க்யூ டாக்டர்’
‘சரி! அவினாஷ் என்ன ப்ரிஸ்க்ரைப் பண்ணான்?’
‘ரோசுவாஸ்டாட்டின் 20எம்ஜி’
‘சொச்சம்?’
‘ஆஸ்ப்ரின் 150’
‘150 வேண்டாம். 75எம்ஜி போதும். ஆஞ்சியோப்ளாஸ்டி பண்ணியே15 வருஷமாகுது. அவினாஷுக்கு இதெல்லாம் தெரியாதா? வெறென்ன போட்ருக்கான்?’
‘வேற ஒன்னியும் இல்ல டாக்டர்’
‘ டாமிட்! BPக்கு டெல்மிசார்ட்டன் 20எம்ஜி சேர்க்கலையா? நாளைக்கி ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா அவங்க புருஷன் குப்தாக்கு யார் பதில் சொல்றது?
‘ இல்ல டாக்டர். ஷி ஹேஸ் லோ BP ஆல்வேஸ்’
‘ அது எனக்கு தெரியும். டிஸ்பைட் தட் அவங்க BP டாப்ளட் எடுத்துக்கனும்.. அ பார்ட் ஆஃப் மெடிகல் ப்ரூடன்ஸ். அவினாஷை நீட் எக்ஸாம் எழுதச்சொல்லு. ரிப்போர்ட்ஸை கொண்டா, பாத்துடறேன்’
‘ஓகே டாக்டர். ஒரு சின்ன கொஸ்டின்.. கேன் ஐ?’
‘கோ அஹெட்’
‘இல்ல.. வந்து.. காலேலர்ந்து யூ சீம் டிஸ்டர்ப்ட்’
‘அதுவா? இன்னிக்கி என்ன தேதி?’
‘நொவெம்பர் இலெவன்.. சாரி.. ட்வெல்வ்’
‘ரெண்டு வேலை செய்யச்சொன்னேன் உன் கிட்டே.. யூ ஃபர்காட்?’
‘அது வந்து.. என்ன வேலை! ஓ.. அயாம் சோ சாரி டியர். மால்புவா ஒரு கிலோ வாங்கச்சொன்னீங்க. தி அதர் வொன் ஈஸ்.. அந்த ஶ்ரீதர் சீதாபதிய வுட்டு ஒரு கார்ட்டூன் வரைஞ்சி உங்க ஃப்ரெண்ட் ஜெ.ரகுநாதனுக்கு அவருக்கு புடிச்ச மால்புவாவோட க்ரீட்டிங் அனுப்பச்சொன்னீங்க. யூ செட் டுடே ஈஸ் ஹிஸ் பர்த்டே’
பி.கு:
ஆவ்ரில் அந்த மால்புவா ஸ்வீட் டப்பாவையும், ஶ்ரீதர் வரைந்த கார்ட்டூனையும் Jay Raghu விற்கு அனுப்பியாச்சு (படம் பார்க்க)

காமாட்சி ஶ்ரீதர்

 இனிய பஹ்ரைனில் நகரின் மத்தியில் ஹூரா பகுதியில் மிகப்பெரிய காலி மைதானமொன்று பல வருடங்கள் இருந்தது. தினமும் அரபி பையன்கள் கால்பந்து விளையாடுமிடமாக இருக்க, ஒரு பணக்கார அரபியோ ஷேக்கோ அந்த இடத்தில் தரை மற்றும் முதல் தளம் மட்டும் கொண்ட மிகப்பெரிய கேட்டட் கம்யூனிட்டி ஒன்றை கட்ட, நகரில் உள்ள அனைத்து பெரிய வங்கிகள் அங்கே அபார்ட்மென்ட்டுகளை லீஸுக்கு எடுத்து அவர்களது சீனியர் மேனேஜ்மென்ட் பணியாளர்களுக்கு வீடு கொடுத்தது. அரபு நாடுகளுக்கே உரித்தான பொன்னிற பாலைவன மணல், அதாவது Golden Sands என்ற பெயர் கொண்ட அந்த குடியிருப்பு வளாகம் மிகவும் பிரசித்தி பெற்றது. ‘ஓ.. நீங்க கோல்டன் சேன்ட்ஸ்ல இருக்கீங்களா!’ என எல்லோரும் கேட்கும் அளவிற்கு அங்கு குடியிருப்பவர்களுக்கு ஒரு பெருமிதம்.

சொல்ல வந்தது, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் இருக்கும் எனது நண்பர் ஶ்ரீதர் நடராஜன் அங்கே குடியிருந்தார். அபாரமாக பாடக்கூடியவர். மேடைகளில் ஜேசுதாஸ் மற்றும் SPB பாடல்கள் பாடி பிரபலமடைந்தவர். ஸ்மியூலில் கரோக்கி பாடல்கள் ரெகுலராக பாடுபவர். SP பாலு போலவே ராகங்கள், ஆலாபனைகள், சங்கதிகள், ஏற்ற இறக்கங்கள் என பாடல்களை பிச்சி உதறுபவர். நான் தாயகம் திரும்ப சில வருடங்கள் முன்பு இவரும் பஹ்ரைனை விட்டுக் கிளம்பி பெங்களூரில் செட்டிலானார்.
அமெரிக்க ஹனிவெல் எனும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இந்திய அலுவலகத்தில் பணிபுரிந்து தற்போது வெஸ்டர்ன் டிஜிட்டல் எனும் மற்றொரு அமெரிக்க கம்பெனியில் இயக்குநர் மற்றும் கார்பரேட் ரியல் எஸ்டேட் பிரிவின் தலைவர் இவர்.
பெங்களூர் பெலந்தூர் பகுதியில் இவர் குடியிருக்கும் ஆதர்ஷ் பா(ல்)ம் ரெட்ரீட் வளாகம் நோக்கி காரை செலுத்த, மற்றொரு பஹ்ரைன்/இந்திய நண்பர் ஹரி-சுதா தம்பதியும் எங்களுடன் சேர்ந்துகொண்டனர். செக்யூரிட்டி கேட்டை தாண்டியதும் எங்கள் பிரமிப்பு அடங்க கொஞ்ச நேரமானது. காரணம் அந்த பிரதேசமே அமெரிக்க சிலிகன் வேல்லி போல உயர் கட்டிடங்களும், வணிக வளாகங்கள், பூங்கா, மால், ஃபுட்கோர்ட் என எல்லாமே பிரம்மான்டமாக இருந்தது. பெங்களூரின் பாடாவதி ரோடுகள், ரோட்டின் மத்தியில் பதுங்கு குழிகள் எல்லாம் கடந்து வந்த எங்களுக்கு அந்த பகுதி முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.
நவராத்திரி விஜயம் என்பதால் காபி, பக்ஷ்ணங்கள் மிக்சர் என நாங்கள் மொஸ்க்கிக்கொண்டிருக்க, இவரும் தனது மிக்சரை வெளியே எடுத்தார், ஆமாம், மியூசிக் சவுண்ட் மிக்ஸர். ஒயர்களை இங்குமங்கும் சொறுகி, மைக்கை பொருத்தி, அடுத்த ஒரு மணி நேரம் மழை பெய்து ஓய்ந்தது போல சினிமா கரோக்கி பாடல்களை பாடி அசத்தினார். அவரது அப்பா (80+) எங்களுடன் சேர்ந்துகொண்டு அரட்டையடிக்க நேரம் போனது தெரியவில்லை.
நெற்றியில் புரளும் உப்பு மிளகு கேசக்கற்றை, இரண்டுநாள் தாடி, முகத்தில்அணிந்திருக்கும் புன்னகை, ஆர்பாட்டமில்லாமல் பணிவுடன் பேசும் பாங்கு.. இதெல்லாம் நண்பர் ஶ்ரீதரின் அடையாளங்கள். மணியாக அவரது இரண்டு பையன்கள் சகஜமாக எங்களுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

காமாட்சி ஶ்ரீதர் என நண்பர்களால் அறியப்படும் இவரது மனைவி கமாட்சி விருந்தோம்பலுக்கு உதாரணம் என சொல்லும் அளவிற்கு எங்களை கவனித்து டிபன் வைத்தார்.
மனைவியிடம் ‘நேரமாச்சு.. கிளம்பலாமா?’ என கண் சைகை செய்வதை கவனித்து விட்ட இவர் ‘எங்க கிளம்பறீங்க? இப்ப நம்ப எல்லோரும் கீழே ஃபுட் கோர்ட் போறோம்’ என அறிவிக்க, சின்ன குழந்தைகள் போல ‘ஹே’ என கத்தினோம். ஆக்ச்சுவலி அவங்க வீட்லயே டின்னர் எதிர்பார்த்து தான் வந்தோம்ல!
சவுத் இண்டியன், பஞ்சாபி, கேரளா, கர்நாடகா என எல்லா பிரிவுகளும் கொண்ட பிரம்மாண்டமான ஃபுட்கோர்ட் அது. பானிபூரி, சோலே பட்டூரா, தோசா, ரவா இட்லி என ஆளாளுக்கு எல்லா திசைகளிலிருந்தும் வாங்கி கொண்டு வந்து குவித்து, சாப்பிட்டு, ஶ்ரீதரின் 80+ அப்பாவுடனும் ஜாலியாக அரட்டையடித்துக்கொண்டு, இரவு பத்து மணிக்கு மேல் கிளம்பினோம்.