Tuesday, October 1, 2019

மூர்த்தி

95இல் பஹ்ரைனில் பிரபலமான சிவகுமார் மாமாவின் சென்டாஃப் பார்ட்டியில் அவரது உருவப்படத்தை வரைந்து மேடையில் நான் அவரிடம் அளிப்பதாக ஏற்பாடாகியிருத்தது. வெறுமனே படத்தை கொடுப்பதற்கு பதிலாக இரண்டு நிமிடம் ஏதாவது பேச வேண்டுமென நினைத்த எனக்கு ஆபத்பாந்தவனாக வந்தது இந்த லக்ஷ்மி மூர்த்தி தான். கடைசி நிமிடத்தில் சிவகுமார் மாமா பற்றிய கவிதையை மேடைக்கு பின்னால் சட்டென மூர்த்தி எழுதி உடனே என்னுடன் மேடை ஏறி கவிதையை வாசிக்க, ஓவியத்தை நான் அளித்து கைத்தட்டல் பெற்றது மறக்க முடியாத அனுபவம்.
சிலர்த்து நிற்கும் தலைமுடியை அழகாக படிய வாரி வந்து நிற்கும் மூர்த்தியிடம் யாராவது ‘ஏம்ப்பா ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கே’ எனக்கேட்டால் மூர்த்தியிடமிருந்து வரும் பதில் ‘அது மட்டும் தான் நம்ம கன்ட்ரோல்ல இருக்கு’.
வெள்ளியன்று Ganapathi Subramanian என்னை Gopala Sundaram மாமா வீட்டிற்கு கூட்டிப்போவான். இசை மற்றும் ராகங்களைப்பற்றி மாமா விளக்குவார். மூர்த்தியையும் தவறாமல் அங்கே பார்க்கலாம். ‘இது வரைக்கும் சா பா சா படிச்சோம்.. அடுத்து ச மோ சா சாப்பிடலாம் என மூர்த்தி உட்பட சிலர் குரல் கொடுக்க சுடச்சுட சமோசா கொண்டு வந்து வைப்பார் ருக்கு மாமி. பஹ்ரைனில் மறக்க முடியாத தருணங்கள்.
மூர்த்தி திருச்சி நங்கவரம் ஸ்டோர்ஸ் அல்லது இரட்டை மால் தெரு என ஞாபகம். சி.ஏ. படிக்கும்போது கணபதிக்கு ஜூனியர். Tiruchendurai Ramamurthy Sankar இன் கிளாஸ் மேட் (திருச்சி ஈஆர் ஹைஸ்கூல்). பஹ்ரைனில் டிராமா போடுவது, இசை வகுப்பு என எல்லாவற்றிலும் மூர்த்தியை பார்க்கலாம்.
பஹ்ரைன் விட்டு
அக்குழந்தை கீதையை அழகாக சொல்லவும் ஆச்சரியமாக கேட்ட என்னிடம் நண்பர் ‘பகவத்கீதையை துபாயில் ரொம்ப அழகாக உரையாற்ற மூர்த்தியை அடிச்சுக்க ஆளே இல்லை’ என சொல்லி அவர் காட்டிய போட்டோவை பார்த்தால் நம்ம மூர்த்தி தான் அது என தெரிந்து கொண்டேன். மூர்த்தி துபாயில் ரொம்ப பிரபலமாம்.
மூர்த்தி துபாய் பக்கம் போய் பல வருடங்களாகிறது. ஒரு நாள் துபாய் நண்பர் ஒருவர் தன் குழந்தையை பற்றி சொல்லிக்கொண்டிருக்கும்போது
அப்புறம் துபாயில் மூர்த்தியை பல வருடங்கள் கழித்து சந்தித்தது, மூர்த்தி மற்றும் நண்பர்கள் Ganesh Subramanian மற்றும் Rangesh Embar உடன் IPL மாட்ச் பார்த்தது, கராமா பகுதி சரவணபவனில் சாப்பிட்டது, சென்ற மாதம் க்வசேய்ஸ் பகுதி அம்ருதா உணவு விடுதியில் சந்தித்தது என மூர்த்தியுடனான என் தொடர்பு இப்பொழுதும்...
Fonterra எனும் உலகப்புகழ் பெற்ற நிறுவனமொன்றில் CFOவாக இருந்த மூர்த்தி இப்பொழுதும் ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் அமைதியாக மலர்ந்த முகத்துடன் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று பிறந்த நாளாம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மூர்த்தி...

No comments:

Post a Comment