Sunday, November 12, 2017

சங்கர் நாராயணன்

பெங்களூர் MG ரோடு ட்ரினிடி சர்க்கிள் விவான்டா தாஜ் ஹோட்டலை அடுத்து பத்து தளங்கள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடம் விஜயா பாங்க்கின் தலைமையகம்.
செக்யூரிடி அலுவலரிடம் இன்னாரை பார்க்க வேண்டுமென சொன்னதுதான் தாமதம், உடனே லிஃப்ட் வரும்வரை என்னை இருக்கையில் அமரச்சொல்லி, பின் லிஃப்ட் கதவை திறந்து என்னுடன் முதல் தளம் வரை வந்து விட்டுப்போனதிலிருந்தே தெரிந்தது இவருக்கு அங்கே என்னவொரு மரியாதை மற்றும் செல்வாக்கு என. முதல் தளத்தில் பார்வையாளருக்கான பிரத்யேக அறையில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தேன்.
சில நிமிடங்களில் இரண்டு உதவியாளர்களுடன் நேரே பார்வையாளர் அறை நோக்கி என்னிடம் வந்து 'வாங்க ஶ்ரீதர்!' என வரவேற்று ஆரத்தழுவி, என் தோளில் கரமிட்டு தன் அறைக்கு அழைத்துச்சென்ற, ரானா டக்குபடி உயரம் கொண்ட ஆஜானுபாகு அழகன் இவர்.
இவர் Sankara Narayanan R A ). செப்டம்பர் 1 முதல் விஜயா பாங்க்கின் MD & CEO யாக பதவியேற்று திருச்சிக்கு பெருமை சேர்த்திருப்பவர். நான் படித்த புனித சூசையப்பர் கல்லூரி (St Joseph's) சக மாணவர். நண்பர்கள் கணபதி, ஜோசப் செபாஸ்டியன், சிவகுமார் மற்றும் பல்லடம் ஶ்ரீதரன் போன்ற நண்பர்களுடன் பி.எஸ்ஸி பௌதிகம், பின் மேலும் உயர் படிப்புகள் படித்தவர்.
சங்கர் நாராயணன் (
அவரது அகலமான மேசையின் ஒருபுறம் மூன்றடி உயர விநாயகர் சிலை. மறுபுறம் நான்கடி வெங்கடாசலபதி பெருமாள். முதல் நாள் தான் பெங்களூர் அலுவலகம் வந்தாராம். வந்தவுடனே தனக்கு பிடித்த அம்மன் படத்தை விநாயகர் அருகே வைத்து ஒரு விளக்கையும் ஏற்றியிருந்தார். எதிரே பெரிய டீவியில் ஓடிக்கொண்டிருக்கும் நிதி சார்ந்த செய்திகள்.
பாங்க் ஆஃப் இந்தியாவின் (BOI) எக்ஸிக்யூடிவ் டைரக்டராக இருந்து பதவி உயர்வு பெற்று விஜயா பாங்க்கின் MD & CEO வாக பொறுப்பேற்றுள்ள அவர் 34 வருடங்கள் BOI வில் இருந்தவர். டோக்யோ, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருந்தவர்.
'சொல்லுங்க ஶ்ரீதர்! பசங்க எப்பிடி இருக்காங்க?' என படு சகஜமாக பேசும் சங்கர் என்னுடைய முகநூல் பதிவுகளனைத்தையும் தவறாமல் படிப்பதல்லாது, எல்லா மேம்படுத்தல்களையும் நினைவில் கொண்டு விசாரிக்கவும் செய்பவர். திருச்சி பற்றி நிறைய பேசிக்கொண்டிருந்தார். எதிரே அருமையான மசாலாச்சாய் மற்றும் தட்டில் hide & seek சாக்லேட் பிஸ்கட்.
சங்கரின் அருமை பெருமைகளை இவரது சக வகுப்பு மாணவனான கணபதி நிறைய சொல்லியிருக்கிறான். வங்கியில் நிறைய சாதனைகள் செய்தவர். திருச்சி ஶ்ரீரங்கத்தில் எங்களிருவருக்கும் பொதுவான நிறைய நண்பர்கள்.
ஜெயலலிதா அவர்களின் பதவியேற்பு விழா முதல் வரிசையில் அமர்ந்திருந்த இவருடன், பஹ்ரைன் டிவியில் இவரை பார்த்துக்கொண்டே என்னால் chat செய்யும் அளவிற்கு சிறிதும் தலைக்கனமேதுமில்லாத எளிமையானவர்.
விஜயா வங்கியின் வளர்ச்சிக்கென நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார். தினமும் 14 மணி நேரத்திற்கு மேல் உழைப்பவர். பாங்க் ஆஃப் இந்தியாவின் NPA( non performing assets) உள்ளிட்டவைகளை மிகவும் திறமையாக கையாண்டு Chief General Manager பதவியிலிருந்து Executive Directorஆக குறுகிய காலத்தில் உயர்ந்து தற்போது விஜயா பாங்க்கின் மிக உயர்வான MD & CEO பதவிக்கு வந்தவர். அடுத்து ரிசர்வ் வங்கியின் Deputy Governor ஆக உயர இவருக்கு ஏற்கனவே வாழ்த்துச்செயதிகள் வந்துவிட்டன.
Consultant bankerஆன Sridharan Srinivasan (எங்களுக்கு 'பல்லடம் ஶ்ரீதர்'😃) அண்ணா பல்கலைக்கழகத்தின் Science & Humanities facultyயின் சேர்மனான Sivakumar Kandasamy மற்றும் தணிக்கை, தகவல் தொழில்நுட்ப வல்லுனரான Ganapathi Subramanian, தங்களின் ஆசானான கணிதத்துறை பேராசிரியர் முனைவர் Jayasankaran Natesan Mailrangam எல்லோரைப்பற்றியும் வெகுஉயர்வாக பேசிக்கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனது தெரியவில்லை. இரவு மணி ஏழைத்தாண்டியது. பெங்களூரில் பணியிலிருக்கும் அவரது மகள்
அறைக்குள் நுழைய, அவரை அறிமுகம் செய்து வைத்தார். MA பொருளாதாரம் முடித்து MA-Education படித்துக்கொண்டு, இதழியல் மற்றும் கல்வி சார்ந்த துறையில் பணியிலிருக்கும் அவரது மகள் அப்பாவைப்போல இந்திய பொருளாதாரத்தை கரைத்து குடித்திருக்கிறார். அந்த சில நிமிடங்களில் இந்திய பொருளாதாரம், வளர்ச்சி விகிதம், ரிசர்வ் வங்கி, பணவீக்கம், ரகுராம்ராஜன் என தந்தையுடன் அவர் பேச ஆரம்பிக்க, நான் மடக்கென தேநீரை குடித்துவிட்டு அவரை வாழ்த்திவிட்டு கிளம்ப ஆயத்தமானேன்.
'Get him a nice corporate gift' என தொலைபேசியில் சொல்லி அன்பளிப்பு வரவழைத்ததும் அடுத்த நிமிடம் மகளை விட்டு என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு லிஃப்ட் வரை வந்து வழியனுப்பி வைத்த சங்கரை நினைத்தவாறே ஓலாவில் அமர்ந்ததும் நான் முனுமுனுத்தது.. 'திருச்சிடா'!

No comments:

Post a Comment