Sunday, April 2, 2017

Tiruchendurai Ramamurthy Sankar

1999/2000 ல் இவர் முதன்முதலாக எங்கள் 'பஹ்ரைன் ஸ்லோகா க்ரூப்'பிற்கு அறிமுகம் ஆனார். பிறகு மற்ற வளைகுடா நாடுகளில் வேலை செய்துவிட்டு கடந்த 3 வருடங்களாக மறுபடியும் பஹ்ரைன்/சவுதி....
பழக இனிய நண்பர். . எங்கூர்க்காரர்(திருச்சி)...சி.ஏ. மட்டுமல்லாது அது சம்மந்தப்பட்ட உயர் படிப்புகள் படித்தும் படாடோபமில்லாமல் ரொம்ப அடக்கம்.. எப்போதும் முகத்தில் அணிந்திருக்கும் புன்னகை..சவுதியிலிருந்து பஹ்ரைன் வரும்போது தவறாமல் வீட்டுக்கு வருவார்..சாப்பிட ஹோட்டலுக்கு கூட்டிப்போவார். மணிக்கணக்கில் சுவாரசியமாக பேசிக்கொண்டிருப்பார்..
தயக்கமில்லாமல் சொல்ல வந்த கருத்தை தாழ்மையுடனும் அழுத்தமாகவும் சொல்பவர்.
பம்பாய் சர்னி ரோடு மரைன் ட்ரைவ் பகுதியில் தினமும் அன்றைய நிகழ்வுகளை சம்மந்தப்படுத்தி வெளியிடப்படும் மிகப்பிரபலமான 'அமுல் வெண்ணெய் விளம்பரம்' போல தனது அரசியல் பதிவுகளை நாலைந்து வரிகளில் நையாண்டி/நகைச்சுவை கலந்து நச்சென எழுதுபவர்..
கதை, கட்டுரை, கவிதை, இந்திய/உலக அரசியல், தமிழ்/ஆங்கில இலக்கியம் என எல்லா துறைகளிலும் கலக்குபவர்...
'மோட்டுவளைச்சிந்தனைகள்' மற்றும் 'காதல் தஸ்தாவேஜுக்கள்' தொடர்கள் எழுதி முகநூல்
உலகையை அசத்தியவர்...
நகைச்சுவை தான் இவரது பலம் என்பதற்கு இவரது பதிவுகளில் நிறைய சான்றுகள். சாம்பிளுக்கு சில இதோ...
பெட்டிக்கடியில் வைத்து கை வைத்த வெள்ளை பனியனை தேடுவதைப்பற்றி எழுதி அப்படியே நவநீத கிருஷ்ணனை(விஜய லக்ஷ்மி) கலாய்ப்பது...
ராஜேஷ் 'காக்கா' இறந்தபோது அவருக்கு விருது வழங்கியிருக்கலாமென அங்கலாய்க்காமல் 'காக்கா' ராதாகிருஷ்ணனுக்கு விருது வழங்க 'பரிந்துரை' செய்தவர்..
இலங்கையில் புதிய ஆட்சி மலர்ந்ததும் 'டெசோ, சீமாசோ, வைகோசோ, நெடுசோ' என இவர்களை சாடியவர்...
'தி'றந்த 'ம'டல் கிருஷ்ணா' வாம்.
'சிறு குழந்தை போல நடந்துகொண்ட அத்வானியை 'LK'ji என்பதற்கு பதிலாக இனி LKG என அழைக்கலா'மாம்,..
'என்ன சங்கர்...ஃப்ரெஞ்ச் ஓப்பன் ஜிம் குரியர்.. வயது 21 ன்னு போடறான்.. சட்டைய கழட்னா பூணூலே இல்ல' என கேட்கும் மாமா புள்ள நந்து...
'பிராண்டு அம்பாசிடரா? ஏண்ணே அம்பாசிடரத்தான் மூடிட்டாங்களாமில்லே!'
'மோடி காவி(ய)த்தலைவன்... ராகுல் காலித்தலைய'னாம்...
'மனைவி சொல்லுக்கு எதிர்வாதம் செய்யாமல் 'ஆம்' சொல்லும் அனைவரும் 'ஆம் ஆத்மி' தான்..'
"பெண்ணின் அப்பா: பையனோட நடத்தை எப்பிடி?
தரகர்: என்ன இப்பிடி கேட்டுட்டீங்க..அவனோட நன்னடத்தைக்காக ஆறு மாசம் முன்னேயே ரிலீஸ் பண்ணிட்டாங்க..
பழைய ஜோக்.. ஆனா சஞ்சய் தத்துக்காக எழுதியதல்ல"வாம்...
இவரது மனைவி Kalpana Sankar என் மனைவி Usharani Sridharஉடன் போனில் அரட்டை அடிப்பதைப்பற்றி குறிப்பிடும்போது 'கல்பனா ராங் நம்பர்க்கே அரை மணி நேரம் பேசிட்டு தான் ஃபோனை வைப்பா' என்றது இவரது குறும்பின் ஹலைட்..
ரணகளம் பண்றீங்க சங்கர்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ...

No comments:

Post a Comment