Tuesday, June 2, 2015

நாராயணமூர்த்தி

80களில் ஒரு நாள் தன் சகாக்களுடன் அமெரிக்க நியூயார்க் நகர் வோல் ஸ்ட்ரீட் பகுதியில் ஒரு நிறுவனத்தின் அதிபர் முன்னால் இவர் அமர்ந்திருந்தார்.
'எங்க நிறுவனத்தின் ப்ராஜெக்ட்டை முடிச்சுக்குடுக்க முன் வந்ததுக்கு நன்றி..போய்ட்டு வாங்க.. பதில் போடறோம்' நக்கலாக சிரித்தவன்னம் கை கொடுத்தார் அந்த அமெரிக்கர்.ஆறு மாதமாகியும் பதிலில்லை.
மறுபடியும் அமெரிக்க பயணம்... மிகக் குறைந்த எகானமி கட்டனத்தில் பயணம் செய்து, ஒர் இரவுக்கு சுமார் 100 டாலர்கள் விடுதியில் தங்கி, மறுபடியும் அந்த நிறுவனத்துக்கு போனார் இவர்.
" ஆமா.. நீங்க இந்தியாவுல எங்க ப்ராஜெக்ட பண்றப்ப நாங்க தூங்கிகிட்டிருப்போம். மறு நாள் இது விஷயமா நாங்க உங்க கூட பேசனும்னா நீங்க தூங்கிக்கிட்டு இருப்பீங்க.. இதெல்லாம் சரிப்பட்டு வருமா" மறுபடியும் எகத்தாளமாக கேட்ட அந்த அதிபரிடம் இவர் பொறுமையாக விளக்கினார்.
"கொஞ்சம் வித்தியாசமா யோசிங்கப்பு...எங்க ஆட்கள் 24 மணி நேரம் வேலை செய்வாங்க...ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட தகவல்களை வீட்டுக்கு போறதுக்கு முந்தி எங்களுக்கு அனுப்பிட்டு நீங்க நிம்மதியா குறட்டை விட்டு தூங்கப்போங்க.. மறுநாள் காலைல நீங்க ஆபிஸ் வர்றப்ப உங்க டெஸ்க் டாப்புல எங்க ரிப்போர்ட் ரெடியா இருக்கும். அது விஷயமா பேசனும்னா எங்க டீம் லீடர்ஸ் முழுச்சிக்கிட்டிருப்பாங்க.. எப்பூடீ...?"
இவர் கண்களில் தெரியும் ஒளி, அந்த பதிலில் காட்டிய நம்பிக்கை, சேவையின் தரத்தின் மேலுள்ள அக்கறை, கவனத்தையும் உழைப்பையும், அறிவுத்திறனையும் முதலீடாகக்கொண்ட நிறுவனம்.. சில நொடிகளில் அமெரிக்கரின் மனம் மாற, ஒப்பந்தம் கையொப்பமானது.
அடுத்த சில வருடங்களில் அடுக்கடுக்காக நிறைய ப்ராஜெக்ட்டுகள், காளான்கள் போல் முளைத்த கால் சென்ட்டர்கள்.. ஜட்டி தெரியும் ஜீன்ஸ் போட்ட இளைஞர்கள், காதில் வயரை சொறுகிக்கொண்டு, புடைத்த மணி பர்ஸுடன், முதுகில் மடிக்கணினி மூட்டை அல்லது முதுகோடு அப்பிக்கொண்டு இளம் பெண்ணுடன் பல்ஸரில் உறுமியவன்னம், கப் கார்னுக்கு மாறி, பட்டர் நான் மஞ்சூரியன் சுவைத்து, மால்களில் உலவி, சினிப்ளெக்ஸில் உரசி.... அப்பப்பா... இளைஞர்களுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புக்கள்...'ஓ கே கண்மணி' வரை போய் விட்டோம்...
தகவல் தொழில் நுட்பம் ஜினோ மாதிரி பண்மடங்கு உயர்ந்து இந்தியப்பொருளாதாரம் வளர்த்தது இவரது உபயத்தால்..
இவர்..பத்ம விபூஷன் திரு. நாராயணமூர்த்தி. பிரபல இன்ஃபோஸிஸின் நிறுவனர்.
சுமார் ஒரு மணி நேரம் பஹ்ரைன் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்களுடன் கலந்துரையாடினார்.. நிகழ்ச்சியை நடத்திய மூத்த சி.ஏ.திரு. குமார் கிருஷ்ணமூர்த்தி கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் நகைச்சுவையுடன் மிகவும் உற்சாகமான எழுச்சியூட்டும் inspirational பதில்கள்.பிரமிக்க வைத்தார்..
நண்பர்கள் Meenakshi Sundaram Hariharan மற்றும் Uday Shanbhagக்கு நன்றி. இவரது ஓவியத்தை கரிக்கட்டியால் வரைந்து மேடையில் இவருக்கு அளிக்கும் வாய்ப்பை கொடுத்தவர்கள்.
மேடையில் அந்த ஓரிரு நிமிடங்களிலேயே ' ஓவியம் அருமை.. எப்படி இவ்வளவு நேர்த்தியா வரைஞ்சிங்க? இதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக்குடுத்தீங்கன்னா பத்திரமா ஊருக்கு கொண்டு போவேன்.' என சொல்லி ஓவியத்தின் நகலில் கையொப்பமிட்டுக்கொடுத்தார்.
இவரை கௌரவிக்கும் சில நிமிடங்கள் முன்பு தான் மனைவிக்கு கார் விபத்து என போன் வந்து, நிகழ்ச்சி முடிந்தபின் ஓடினேன்(அவருக்கு அடியேதுமில்லையென தெரிந்துகொண்ட பின்)
அவசரமாக மனைவியைக்காண காரை ஒட்டும்போது கூட இவரது சுவாரஸ்யமான பேச்சு தான் மனதில் ஓடியது.
எவ்வளவு பெரிய பூதாகாரமான பிரச்சினையாக இருந்தாலும் அதை எளிய முறையில் சந்திக்க அவர் கொடுத்த டிப்ஸ்..
how to eat a big elephant?
by cutting it into small pieces.

No comments:

Post a Comment