Sunday, February 2, 2014

வாடிகன்

நேற்று மதியம் சுமார் 3 மணி நேரம் வாடிகன் அரண்மணையை எங்களுக்கு சுற்றிக்காண்பித்த அந்த guideக்கு வயது 70க்கு மேல் இருக்கும். அமெரிக்கர். ஏதோ திருச்சி அல்லிமால் தெரு முனையில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருப்பது போல் வாஞ்சையுடன் பேசினார். ...நாங்கள் மொத்தம் 12 பேர் அவரது குழுவில்.

ரோம் நகரம் மற்றும் ஒருங்கிணைந்த இத்தாலி உருவான கதை, வாடிகனில் (தனி நாடாவதற்கு முன்) போப்பாண்டவர்கள் தங்கள் உரிமைக்காக போராடியது, பிறகு அரண்மணை கட்டியது, ஸீஸர் மற்றும் அகஸ்டஸ் பற்றிய விபரங்கள், மைக்கல் ஆஞ்சலோ முதன்முதலில் ரோமுக்கு வந்தது, அவரை யாருக்கும் ஆரம்பத்தில் தெரியாதது, அவர் தனியாக தீவு ஒன்றில் சில வருடங்கள் தங்கியிருந்து அரண்மணையின் வரைப்படத்துக்கு (plan) ஏற்றவாறு தன் ஓவியங்கள் வரைய அளவுகள் மற்றும் themes தயார் செய்தது, பிறகு அரண்மணை முழுவதும் ஓவியங்கள் வரைந்தது, அவரது சீடர்கள் தண்ணீரில் வர்ணங்களை கலந்து 20 மீட்டர் உயரத்தில் இருக்கும் மைக்கலுக்கு கயிறு மூலம் அனுப்ப அவர் வானம் பார்த்தவாறு படுத்துக்கொண்டே ceilingஇல் Jesus, Moses, vergin Mary, last supper போன்ற உலகப்புகழ் பெற்ற படங்களை வரைந்த விபரங்கள்....

Guide சளைக்காமல் பேசிக்கொண்டிருந்தார். மனுஷனுக்கு கை, கால் கொடைச்சலே வராது என நிணைக்கிறேன். எங்களுக்குத்தான் அப்பப்ப பசி, தண்ணித்தாகம், இயற்கையின் அழைப்பு எல்லாம் வரிசையாக....
ஒரு மணி நேரத்திற்கு மேல் விலாவாரியாக guide விளக்கியபோது நமக்கு விலா எலும்பு வலித்தது.

எவ்வளவு நேரம் தான் மோட்டு வளைகளையும் விட்டத்தையும் பார்ப்பது? தோளுக்கு மேல் வளர்ந்த என் சின்னவன் மெல்ல என் தோளின் மேல் சாய்ந்து கொண்டு ' does he have any break in his job?' என கேட்ட போது அவருக்கு ஏதோ அசரீரி சொல்லி விட்டது மாதிரி புரிந்து விட்டது போலும். ஆசாமி படு உஷார். "At the end of my session I will be asking questions to some one I choose from you guys" என ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அது வரை வெறுமனே தலையை ஆட்டிக்கொண்டிருந்த என் பார்யாள் கலவரத்துடன் என்னை பார்த்து "ஏமி போடுஸ்தாமா" என கேட்க, கூட வந்திருந்த மற்றொரு இங்கிலாந்துக்காரர் "oh gaad" என சலித்துக்கொண்டார். அடுத்து அவர் 'next one and half hours, I will be briefing you on the functioning of pope's office and his powers' என்றதும் நாங்கள் கீழே விழாமலிருக்க ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டோம். Guide இங்கே விளக்கிக்கொண்டிருக்கும்போது மற்றொரு நிர்வாண ஓவியத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெங்காலிக்காரரைப் பார்த்து "are you with me?" என கோபமாக நம்ம guide அதட்ட, எண்ணை மூஞ்சியுடன் இருந்த பெங்காலிக்காரர் நறநறவென பல்லைக்கடித்து அம்ரீஷ் பூரி மாதிரி பதிலுக்கு முறைத்தார்.

அந்த guideஐ குறை சொல்வது சரியல்ல. மதியம் 4 மணிக்கு மேல் எல்லோருக்கும் டீ தேவைப்பட்டது. மிக அழகாக அவர் தன் கடமையை செய்து கொண்டிருந்தார். கடைசியாக பிரம்மாண்டமான Sistine chapel கொண்டு சென்று காட்டியபோது பிரமிப்படைந்தோம். அதற்கு முன் இந்த வெள்ளைக் கோட்டிற்கு அந்த பக்கம் வாடிகன் இந்த பக்கம் ரோம் போன்ற சமாசாரங்கள், உலகத்தில்
உள்ள எல்லா கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவர் போப் என்றும், போப் தங்கும் இல்லம், வாடிகன் அலுவலகங்கள், பரப்பளவில் ஶ்ரீரங்கத்தை விட சிறியதான(என் ஊகத்தில்)அந்நாட்டிற்கு தனி நாணயம் மற்றும் பாஸ்போர்ட் போன்ற விபரங்கள், அங்கே அலுவலகத்தில் பணி புரியும் மக்கள் எல்லோரையும் காண்பித்தார்.

சிப்பந்தி ஒருவர் சிரத்தையுடன் போப் மற்றும் அவரது glergymen, கார்டினல்களுக்கு புதிய உடைகள் தைத்து அழகாக சுவற்றில் மாட்டி வைத்துக்கொண்டிருந்தார்.அத்தனை guardsம் உம்மனாம் மூஞ்சிகள்...Swiss நாட்டவர்களாம். நமக்கு வத்தல் வடாம் மாதிரி swiss guardsக்கு சாக்லேட் தான் மதியம் தொட்டுக்கொள்ள..போன்ற தகவல்கள்,
சிலர் Greece மற்றும் எகிப்து நாட்டவர்களாம்.(முன்பு கிரீஸ், எகிப்து நாடுகள் இத்தாலியின் காலனி ஆதிக்கத்திற்குட்பட்டிருந்ததால்)...முந்தைய போப் பெனடிட்டோ ஜெர்மானியர் என்பதால் நிறைய ஜெர்மானியர்கள் பணிபரிகின்றனர் என்பது உபரித்தகவல்...நம் அமெரிக்க guide கொஞ்சம் விஷமப்பேர்வழி. அங்கு நடக்கும் அரசியலையும் நமக்கு கொஞ்சம் விளக்கினார்.(அப்போது மட்டும் எங்களுக்கு களைப்பே தெரியவில்லை)

அது சரி... அங்கு கர்ம சிரத்தையுடன் போப் மற்றும் கார்டினல்களுக்கு உடைகள் தைக்கும் அந்த அன்பருக்காகத்தான் இந்த பதிவையே எழுதுகிறேன். அவர் ஒர் இந்தியர் என guide சொன்னபோது எங்களுக்கு பெருமிதம் தாங்கவில்லை. உலகத்தின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றான வாடிகனில் ஒரு இந்தியர் என எங்களுக்கு புல்லரித்தது.அவர் எந்த மாநிலத்தவர்?

புள்ளி..மலையாளியானு...

No comments:

Post a Comment