Wednesday, January 30, 2013

P.B.ஸ்ரீநிவாஸ்

ஒவ்வொரு வருடம் மயிலாப்பூர் நியூ வூட்லண்ட்சில் தங்கும்போது அங்கே பிரபல பின்னணிப்பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் அவர்கள் சிற்றுண்டி உண்ண வருவதை பார்க்கும்போது அவர் அங்கு வரும் ரெகுலர் வாடிக்கையாளர் என்பது தெரிந்தது.

 மற்றவர்கள் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. நான் மட்டும் அவரை அதிசயமாக பார்த்தேன். அருகே போய் பேச தயக்கம் மற்றும் பயம் கலந்த மரியாதை. எத்தனை பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனித்துவம் அமை...த்து legendry singer ஆக வலம் வந்தவர்.

 உறவினர்கள் புடைசூழ சாதாரண பொதுஜனமாய் ஜரிகை தலைப்பாகை, பஞ்சகச்சம்,அங்கவஸ்திரத்துடன் பொங்கல் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

 Action மற்றும் angry youngman ஹீரோக்களுக்கு பாடாமல் குடும்பஸ்த ஜெமினிகளுக்கும், குறும்புக்காரமுத்துராமன்களுக்கும் ரவிச்சந்திரன்களுக்கும் , கண்ணை உருட்டி காதல் செய்து பிறகு காதலியை கழட்டி விடும் பாலாஜிகளுக்கும்,அவ்வப்போது நாகேஷுக்கும், ஆனந்தன் போன்றோருக்கும், நீட்டிமுழக்கி வாயை குவித்து பேசும் ஸ்ரீகாந்த்களுக்கும், TMS போன்றோருக்கு ஜுரம் வரவைத்த 'என்னருகே நீயிருந்தால், பால்வண்ணம் பருவம் கண்டேன் என்று MGR க்கே பாடி அசத்தி ஒரு பெரிய சகாப்தத்தை உருவாக்கி, நிரந்தர ஓய்வு பெற்ற பின்னும் மனோஜ் கியானுக்காக 'தோல்வி நிலையென நினைத்தால்' என்று சாதனை படைத்தவர் ஆயிற்றே...

No comments:

Post a Comment